பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           485

 ஒழிந்த இயற்சீர் பத்தும் கொண்டு தளை வழங்கப்படும்.

     என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘இயற்சீர் ஒருபதும் தன்சீரோர் ஆறும்
     இயற்றுப ஆசிரி யத்தென் - றியற்றுங்கால்
     தன்சீர் வருமேல் தளைநோக்கார் மற்றொழிந்த
     இன்சீராற் கொள்வர் தளை’.

 என்பவாகலின்.

    இயற்சீர் பத்துமே கொண்டு அடி வகுக்குமிடத்து நான்கு நிலைமையவாம்.  இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘திரண்டியற்சீர் பத்திற்கும் நான்காம் நிலைமை
     இரண்டாதி ஐந்தீ றெழுத்து’.

 என்பவாகலின்.

    அவற்றுள், ஈரெழுத்துச் சீராவன, நான்காம் அவையாவன, ‘போதுபூ, போரேறு, பாதிரி தேமா’ என இவை. என்னை?

[குறள் வெண்பா]

     ‘ஈரெழுத்துச் சீராவ போதுபூப் போரேறு
     பாதிரி தேமா இவை’.

 என்பவாகலின்.

    அவற்றுள் தேமாவும் பாதிரியும் சிறுமை ஐந்தெழுத்தடியினின்றும் பெருமை பதினேழெழுத்தடிகாறும் உரிமையாய்ப் பதின்மூன்றடியும் ஒரோ ஒரு சீர் பெற இரண்டுமாய் இருபத்தாறாம்.

 என்னை?