[குறள் வெண்பா]
‘கழிந்தமூன் றேழாதி மூவைந் துயர
மொழிந்தனர் மூவொன்ப தென்று’.
என்பவாகலின்.
ஈரெழுத்தாய வழி, நான்கு சீரானும் ஆக்கப்பட்ட வெண்பாவிற்கு
அடித்தொகை முப்பத்தாறு.
என்னை?
[குறள் வெண்பா]
‘ஈரெழுத்து நாற்சீரா வெள்ளைக் கடித்தொகை
கூறுவர் முப்பத்தா றென்று’.
என்பவாகலின்.
வெள்ளைக்கு மூவெழுத்துச் சீராவன, பாதிரியும், மாசெல்வாயும்,
மாபடுவாயும், புளிமாவும், போதுபூவும், போரேறும், பூமருதும், விறகுதீயும்,
கடியாறும் என ஒன்பது சீரும் எனக் கொள்க.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘பாதிரியும் மாசெல்வாய் மாபடுவாய் இன்புளிமாப்
போதுபூப் போரேறு பூமருது - தீதில்
விறகுதீ வீழ்கடியா றொன்பதாம் என்றாங்
கறைகுவர் மூவெழுத்துச் சீர்’.
என்பவாகலின்.
அவற்றுள், விறகுதீயும், கடியாறும் என்றிரண்டு சீரும் ஏழெழுத்தடி
முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயர்ந்த பத்தடியும் ஒரோ ஒன்றிற்குப்
பத்துப் பத்தாக, இரண்டிற்குமாக இருபது அடியாம்.
என்னை?
[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
‘தாவில் விறகுதீத் தண்கடியா றென்றிரண்டும்
ஏழுமுத லாகப் பதினா றுயர்த்தெண்ண
ஆகும் அடியிருப தாம்’.
என்பவாகலின்.
|