அவை நான்கு நிலைமையவாம்; இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச்
சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என.
என்னை?
[குறள் வெண்பா]
‘இரண்டெழுத்தும் மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தும்
திரண்டே எழுத்துச்சீர் ஆம்’.
என்பவாகலின்.
வெண்பாவிற்குச் சொல்லப்பட்ட பதினான்கு சீருள்ளும் தேமாவும்,
பாதிரியும், போதுபூவும், போரேறும் என்னும் நான்கு சீரும் ஈரெழுத்துச்
சீராம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘தேமாவே பாதிரி போதுபூப் போரேறென்
றாகுமாம் ஈரெழுத்துச் சீர்’.
என்பவாகலின்.
அவற்றுள், ‘தேமா’ எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடி காறும்
உயர்ந்த ஒன்பதடியும் பெற்ற ஒன்பதேயாம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘தேமாவெட் டாதி பதினா றுயர்த்தெண்ண
ஆமாகும் ஒன்ப தடி’.
என்பவாகலின்.
ஒழிந்த பாதிரியும், போதுபூவும், போரேறும் என்றிவை மூன்றும்
ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்று ஒன்பதாக, இருபத்தேழடியாம்.
என்னை?
|