உ கணபதி துணை |
யாப்பருங்கலக் காரிகை |
மூலமும் உரையும் |
1. உறுப்பியல் |
பாயிரம் |
தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் |
| 1. (1) கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ் எந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர் பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின் கந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே. |
என்பது (2) காரிகை. 1நூல் உரைக்கு மிடத்து நூற்பெயரும், காரணமும், ஆக்கியோன் பெயரும், அளவும், பயனும் 2 உரைத்து உரைக்கற் பாற்று. |
அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், (3) பாளித்தியம் என்னும் 3 பாகத இலக்கணமும் (4) பிங்கலம் என்னும் |
(1) கந்தம் மடிவு இல் - மணம் ஒழிதல் இல்லாத. கடிமலர் - புதுமலர். கண்ணார் நிழல் - இடம் மிக்க நிழல். பாவினம் - பாவும் இனமும். சந்தம் - அழகு. (2) காரிகை - இலக்கணம் கூறும் கட்டளைக் கலித்துறை. (3) பாளித்தியம் என்னும் பாகத இலக்கணம் - பாளித்தியம் என்னும் பிராகிருத மொழியின் இலக்கணம்; பிராகிருத மொழிகளுள் ஒன்றாகிய பாளி மொழியின் இலக்கணம் கூறும் நூல் போலும். (4) பிங்கலம் - பிங்கலாசாரியார் செய்தது. சந்தோவிசிதி - யாப்பிலக்கணம். பிங்கலச் சந்தஸ் ஸூத்ரம் என்று வழங்கும். சூத்திரமும் காரிகையுமாக உள்ளது; வேதாங்கமான யாப்பைப்பற்றி உரைப்பது; 'வடநூலுடையாரும் பிங்கலம் முதலிய சந்தோவிகிதிகளுள் விருத்தச்சாதி விகற்பங்களாற் கிடந்த (பிரதிபேதம்) 1. யாதானமொரு நூலுரைக்கு. 2. எடுத்துரைத் துரைக்கற். 3. பிராகிருத. |