பக்கம் எண் :
 

செய்யுளியல் 'அசையடி முன்ன'

111

 
'பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகுந்
தேங்காத 11கரவினையுந் தெளியாத விருளிடைக்கட்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ ;
 
இவை மூன்றுந் தாழிசை.
 
  'தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்
போதுறு 12நறுமலர் புதுவிரை தெரிதரு கருநெய்தல் விரிவன கழி
தீதுறு திறமறு கெனநனி 13முனிவன துணையொடு பிணைவன துறை
மூதுறு 14மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல்
 
இவை நான்கும் அராகம்.
 
  'கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால்
இடுங்கழி யிராவருதல் வேண்டாவெண் றுரைத்திலமோ
'கருநிறத் 15துறுதொழிற் கராம்பெரி துடைமையால்
இருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ ;
 
இவை நாற்சீர் ஈரடி யிரண்டு அம்போதரங்கம்.
 
  'நாணொடு 16கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே
நயப்பொடு கழிந்தன்றா 17னனவனு நன்னுதற்கே ;
 
இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்.
 
  'அத்திறத்தா லசைந்தன தோள்
அலரதற்கு மெலிந்தன கண்
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்
பொன்னிறத்தாற் போர்த்தன முலை
அழலினா லசைந்தது நகை
அணியினா லொசிந்த திடை
 

     (பி - ம்.) 11. கரவினாற்றெளி. 12. நறுவிரை புதுமலர் விரிதரு. 13. துணையொடு
நனைசினை பிணைவன. 14. மொழியொடு சுரிகெழு மொலிகலி முடிதொடர்.
15. தெழுதொழிற். 16. கலந்தன்றாற். 17. னனவினு.