பக்கம் எண் :
 
112

யாப்பருங்கலக் காரிகை

 
18குழலினா னிமிர்ந்தது முடி
குறையினாற் கோடிற்று நிறை;
 
இவை முச்சீர் ஓரடி யெட்டு அம்போதரங்கம்.
 
  'உட்கொண்ட தகைத்தொருபால்
உலகறிந்த வலத்தொருபால்
கட்கொண்ட றுளித்தொருபால்
கழிவெய்தும் படிற்றொருபால்
பரிவுறூஉந் தகைத்தொருபால்
19படர்வுறூஉம் பசப்பொருபால்
இரவுறூஉந் துயரொருபால்
இளிவந்த வெளிற்றொருபால்
20மெலிவுவந் தலைத்தொருபால்
விளர்ப்புவந் 21தடைந்தொருபால்
பொலிவுசென் றகன்றொருபால்
பொறைவந்து கூர்ந்தொருபால்
காதலிற் 22கதிர்ப்பொருபால்
கட்படாத் துயரொருபால்
ஏதில்சென் 23றணைந்தொருபால்
இயனாணிற் 24செறித்தொருபால்.
 
இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்.
 

எனவாங்கு,

இது தனிச்சொல்.
இன்னதிவ் வழக்க மித்திற மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா 25யாகிக்
கலந்த 23வண்மையை யாயினு நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணிய யாமே
பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே.'
 
இது சுரிதகம்.
 
     இஃது ஆறுறுப்புங் குறைவின்றி வந்த வண்ணகவொத் தாழிசைக் கலிப்பா.
 

     (பி - ம்.) 18. குழலினால் விரிந்தது. 19. படிவுறூஉம், பசப்புவந்தணைந்
தொருபால்.    20.  மேலிவுறூஉந் தகைத்தொருபால்.  21.  தடர்த்தொருபால். 22.
களிப்பொருபால்.  23 றகன்றொருபால். 24. செறிவொருபால். 25. யாகில். 26. வண்மைய
ராயினு.