பக்கம் எண் :
 
138

யாப்பருங்கலக் காரிகை

 

3. ஒழிபியல்

எழுத்துக்களின் புறனடை

  36. சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ உ அளபோ
டாரு மறிவ ரலகு பெறாமையை காரநைவேல்
ஒருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்
வாரும் வடமுந் திகழு முகிண்முலை வாணுதலே.
 
     எ....கை. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் உறுப்பிய லோத்தி னுள்ளும்
செய்யுளிய லோத்தினுள்ளும் சொல்லா தொழிந்த 1பொருளின் இயல்புகளை
உணர்த்திற்றாதலால் ஒழிபிய லோத்து என்னும் பெயர்த்து.
 
     இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ எனின், ஒருசார்
எழுத்துக்கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்....ற்று.
 
     'சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ, உ, அளபோடு ஆரும் அறிவர் அலகு
பெறாமை' - என்பது சீருந் தளையுங் கெடவந்த விடத்துக் குற்றிய லிகரமும்
குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு காரியம் பெறா எ - று.
 
     'ஒற்றளபாய்விடின் ஓர் அலகாம்' என்றுரைத்தமையால், ஈண்டு உயிரளபெடையே
கொள்ளப்பட்டது.
 
     'சீரும் தளையும் சிதையிற் சிறிய இ உ அளபோடு அலகு பெறா' என்னாது 'ஆரு
மறிவர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் குற்றிய லிகரக் குற்றிய லுகரங்கள்
ஒற்றியல்பினவாய் நிற்கும், உயிரள பெடை நெட்டெழுத்தியல்பிற்றாய் நிற்கும், அலகிடு
மிடத்து எனக் கொள்க.
 
     'எதிரது மறுத்தல்' என்னும் இலக்கணத்தாற் சீருந் தளையுந் 2திருந்த நிற்புழி
சிறிய இ உ அளபோடு ஆரும் அறிவர் அலகு பெறுதல் என்பதாயிற்று. சீருந் தளையுங்
கெடாமல் வந்த இடத்துக் குற்றியலிகரக் குற்றியலுகரம் உயிரளபெடைகள் அலகு
காரியம் பெறும் எ - று.
 

     (பி - ம்.) 1. பொருளை யுணர்த்தினமையின். 2. திருந்தி.