பக்கம் எண் :
 

 ஒழிபியல் 'சீருந் தளையுஞ்'

139

 
     இன்னும் 'ஆரும் அறிவர்' என்று சிறப்பித்தவதனால் அவை அலகு காரியம்
பெறும் பொழுது குற்றியலிகரக் குற்றிய லுகரமும் குற்றெழுத்தின் பயத்தவாய் நின்று
அலகு பெறும் எனக் கொள்க.
 
     உயிரபெடைகள் அலகு காரியம் பெறுமாறு தத்தங் காரிகையுட் போக்கிச்
சொல்லுதும்.
 

வரலாறு

வெண்பா

' (1) சிறுநன்றி யின்றிவர்க்கியாஞ் செய்தக்கா னாளைப்
பெறுநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி
தானவாய்ச் செய்வதூஉந் தானமன் றென்பவே
வானவா முள்ளத் தவர்.'
 
     இதனுள், 'இன்றிவர்க்கியாம்' என்புழிக் குற்றிய லிகரம் வந்து [வெண்பாவினுள்]
வஞ்சி யுரிச்சீராயிற்று. வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் விரவும் என்னும் ஓத்திலாமையால்
வெண்பா அழிய நிற்கு மாதலின் ஈண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு
பெறா தென்று களையச் சீர் சிதையாதாம்.
 

குறள் வெண்பா

  'குழலினி தியாழினி தென்ப தம்மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.'

(குறள். 66.)
 

  'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.'

(குறள். 254.)
 

     இவற்றுட், 'குழலினி தியாழினி' தென்புழி ஆசிரியத்தளையும், 'அருளல்ல
தியாதெனி' லென்புழிக் கலித்தளையும் வந்து 'வெள்ளைத் தன்மை குன்றிப் போஞ்சீர்
கனி புகிற் புல்லாதயற்றளை' (கா. 38) என்னும் 3இலக்கணத்தோடு மாறுகொள்ளும்
ஆதலான்
 

     (1) பெரிது மன்னும் என்று. அவாய் - விரும்பி. வான் அவாம் உள்ளத்தவர் -
விண்ணுலகை விரும்பும் மனத்தவர்.
 

     (பி - ம்.) 3. இலக்கணத்தோடும், வெள்ளையுட் பிறதளை விரவா வல்லன,
எல்லாத் தளையு மயங்கியும் வழங்கும்' (யா. வி. சூ. 32.) என்னும் இலக்கணத்தோடும்.