பக்கம் எண் :
 
140

யாப்பருங்கலக் காரிகை

 
     ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான் அலகு பெறா தென்று களையச்
சீருந் தளையுஞ் சிதையாவாம்.
 
     ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான் அலகு பெறா தென்று களையச்
சீருந் தளையுஞ் சிதையாவாம்.
 

வஞ்சிப்பா

 

(2) கொன்றுகோடுநீடு 4குருதிபாயவும்
5சென்றுகோடுநீடு செழுமலைபொருவன
வென்றுகோடுநீடு விறல்வேழம்
என்றுமூடுநீடு பிடியுளபோலும்அதனால்
இண்டிடை யிரவிவ ணெறிவரின்
வண்டுண் கோதை யுயிர்வா ழலளே.'
 

     இக்குறளடி வஞ்சிப்பாவினுட் குற்றிய லுகரம் பல வந்து ஐயசைச் சீரும். ஆறசைச்
சீரும் வந்தன; அவ்வாறு வருக என்னும் ஓத்தில்லாமையால் ஆண்டுக் குற்றுகரங்களை
இவ்விலக்கணத்தால் அலகு பெறா என்று களையச் சீருந் தளையுஞ் சிதையாவாம்.
 
     இனி, உயிரளபெடைக்குச் சொல்லுமாறு :
 

வெண்பா

  ' (3) பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னுந் 6தோன்றிலவால் - நெல்லுக்கு
நூறோஒநூ றென்பா ணுடங்கிடைக்கு மென்முலைக்கும்
மாறோமா லன்றளந்த மண்.'
 
     இதனுள், 'நூறோஒ நூ' றென்புழிப் பண்ட மாற்றின்கண் அளபெடை (4)
அநுகரணம் வந்து வெண்பாவினுள் நாலசைச் சீராயிற்று. அவ்வாறு வருக என்னும்
ஓத்தில்லாமையால் இவ்
 

     (2) கோடு - யானையின் தந்தம், மலையின் சிகரம், சங்கு, யானையின் மத்தகத்திற்
சங்கம்; சீவக 2306 ஊடும் பிடி. இண்டு - ஒரு முட்செடி.

      (3) முல்லை பல்லுக்குத் தோற்ற. இடையும் முலையும் மால் அளந்த உலகினும்
பெருமையுடையன.

      (4) அநுகரணம் - ஒலிக்குறிப்புக்கேற்ற எழுத்தில் ஒன்றும் பலவும் வந்து
செய்யுளடியைப் பிழைபடா வண்ணம் நிரப்புவது.
 

     (பி - ம்) 4. குருதி மாறவும், 5. சென்றுசென்றுநீடு. 6. தூற்றினவால்.