வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டால் ஓசை யூட்டும்பொழுது ஓசை யுண்ணாது செப்பலோசை அழிந்து நிற்குமாதலால் ஈண்டு உயிரளபெடையை இவ்விலக்கணத்தான் அலகு பெறாதென்று [களைந்து] நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடச் சீரும் தளையும் சிதையாவாம். |
வெண்பா |
| ' (5) இடைநுடங்க வீர்ங்கோதை பின்றாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின் உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற் கொப்போநீர் வேலி யுலகு.' |
இதனுள் 'உப்போஒ' என்புழிப் பண்டமாற்றிக்கண் அளபெடை யனுகரணம் வந்து கலித்தளை (6) தட்டு, 7அவ்வாறு வரும் இலக்கணம் இன்மையான் அலகிட்டு உதாரண வாய்பாட்டால் ஓசை யூட்டினும் ஓசை யுண்ணாது செப்பலோசை யழிந்து வருமாதலான், ஈண்டு உயிரளபெடையை [இவ்விலக்கணத்தால்] நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடத் தளை சிதையாதாம். |
இனிக் குற்றிய லிகரக் குற்றியலுகரங்கள் குற்றெழுத்தே போல நின்று அலகு பெறுமாறு. |
வெண்பா |
| ' (7) வந்துநீ பேரி னுயிர்வாழும் வாராக்கான் முந்தியாய் பெய்த வளைகழலும் - முந்தியாம் கோளானே கண்டநங் கோல்குறியா யின்னுமோர் நாளானே நாம்புணரு மாறு' |
இதனுள் 'வந்துநீ' என்புழிக் குற்றியலுகரமும் 'முந்தியாய்' என்புழிக் குற்றியலிகரமும் சீர்தளை சிதையாமல் வந்து திருந்தி நிற்றலிற் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகுபெற்றவாறு கண்டு கொள்க. |
|
(5) கடைகடையின் - முன்றில் தோறும். (6) தட்டு - ஒன்றி. (7) யாய் - தாய். கோள் - கொள்கை. கோல் குறியாய் - கோல் அடையாளமாக. |
|
(பி - ம்.) 7. வெண்பா வழிய நிற்கு மாதலின் ஈண்டு. |