பக்கம் எண் :
 
4

யாப்பருங்கலக் காரிகை

கூட்டி உறழ இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டெழுத்தாம் எனக் கொள்க.
அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை ஒற்றொழித்து ஓரடிக்கு எழுத்துப் பதினாறும்,
நிரையசை முதலாகிய காரிகை ஒற்றொழித்து ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் எனக்
கொள்க. என்னை?
 

 
(17) ['அடியடி தோறு மைஞ்சீ ராகி]
முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்
கடையொரு சீரும் விளங்கா யாகி
நேர்பதி னாறே நிரைபதி னேழென்
றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே.'
என்றார் ஆகலின்,
 
     இந்நூலாற் பயன் யாதோ எனின், யாப்பு ஆராய்தல் பயன். யாப்பு ஆராயவே
பாத் தாழிசை துறை விருத்தங்களால் ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு
என்னும் அவற்றின் 12 மெய்ம்மை அறிந்து விழுப்பம் எய்தி இம்மை மறுமை
வழுவாமை
 
     யாப்பெனினும், பாட்டெனினும், தூக்கெனினும், தொடர் பெனினும்,
செய்யுளெனினும் ஒக்கும். என்னை?

 
'யாப்பும், பாட்டுந் தூக்குந் தொடர்பும் 13 செய்யுளை
நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.'
என்றார் ஆகலின்.

 

     இந்நூல் 14 உறுப்பிய லோத்துஞ் செய்யுளிய லோத்தும் ஒழிபிய லோத்தும் என
மூன்று வகைப்படும். இவ் வோத்தென்ன பெயர்த்தோ எனின், எழுத்தும் அசையும்
சீரும் தளையும் அடியும் தொடையும் என்னும் ஆறு உறுப்பினையும்
உணர்த்திற்றாதலால் 15உறுப்பிய லோத்து என்னும் பெயர்த்து.
 
     இவ்வோத்தினுள் 16இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ வெனின், சிறப்புப்
பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று. என்னை?
 

     பல பிரதிகளில் முதலடி இல்லை. சில பிரதிகளில் பின்னிரண்டடிகளே
காணப்படுகின்றன.
 

     (பி - ம்.) 12 மேன்மை. 13. செய்யுளென்று செப்பினர்புலவர்.  14. உறுப்பியலும்
செய்யுளியலும் ஒழிபியலுமென. 15. உறுப்பிய லென்னும். 16. இக்.