பக்கம் எண் :
 

உறுப்பியல் 'எழுவா யெழுத்தொன்றின்'

47

 
     அடியியைபு இணையியைபு பொழிப்பியைபு ஒரூஉவியைபு கூழையியைபு
மேற்கதுவாயியைபு கீழ்க்கதுவாயியைபு முற்றியைபு எனவும்,
 
     அடியெதுகை இணையெதுகை பொழிப்பெதுகை ஒரூஉ வெதுகை கூழையெதுகை
மேற்கதுவா யெதுகை கீழ்க்கதுவா யெதுகை முற்றெதுகை எனவும்.
 
     அடிமுரண் இணைமுரண் பொழிப்புமுரண் ஒரூஉமுரண் கூழைமுரண்
மேற்கதுவாய் முரண் கீழ்க்கதுவாய்முரண் முற்று முரண் எனவும்,
 
     அடியளபெடை இணையளபெடை பொழிப்பளபெடை ஒரூஉ வளபெடை
கூழையளபெடை மேற்கதுலாயளபெடை கீழ்க்கதுவா யளபெடை முற்றளபெடை எனவும்.
 
     அந்தாதித்தொடை இரட்டைத்தொடை செந்தொடையெனவுங் கிடந்த தொடையும்
தொடை விகற்பங்களும் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்.
 
     அவற்றுள் இக்காரிகை (1) அடிமோனையும், அடியியைபும், அடியெதுகையும்,
அடிமுரணும் அடியளபெடையும் ஆமாறு உணர்....று.
 
     'எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை' எ - து. அடிதோறும் முதலெழுத்து
ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும் எ - று.
 
     எழுவாய் எனினும் ஆதி எனினும் முத லெனினும் ஒக்கும்.
 
     மோனை எனினும் முதற்றொடை எனினும் ஒக்கும்,
 
     'இறுதி யியைபு' எ - து. அடிதோறும் இறுதிக்கண் 2நின்ற
 

     (1) எல்லாத் தொடை விகற்பங்களிலும் மோனையும் எதுகையுமே பாக்களுக்கும்
பாவினங்களுக்கும் இன்றியமையாத சிறப்பினவாக உள்ளன. எதுகை
மோனைகளைப்பற்றிய பிற செய்திகள் 41ஆம் காரிகையுட் கூறப்படுகின்றன. முரண்
தொடையைப் பற்றிய பிற செய்திகள் 40ஆம் காரிகையுட் கூறப்படுகின்றன.

 

     (பி - ம்.) 2. நின்ற சீரை முதற்சீராகக் கொண்டு அச்சீரின் முடி வெழுத்தானும்,
அசையானும், சீரானும் சொல்லானும் ஒன்றி.