பக்கம் எண் :
 
     
70

யாப்பருங்கலக் காரிகை

 
(5) 'தொன்னலகத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல்
பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி
இன்னலத்தகை யிதுவென்ன வெழில்காட்டிச்
சொன்னலத்தகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்கெனப்பெரிதும்
கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ்
சிலம்பிடைச் செலவுஞ் 6சேணிவந் தற்றே.'
     இது முச்சீரடியானும் தூங்கலோசையானும் வந்தமையால் 7சிந்தடி வஞ்சிப்பா.
 
     'உதாரணமே' எ - து. இறுதி விளக்காகக் கொள்க.
 

(2)


     (5) புலம்பு - தனிமை. பரிவு - துன்பம். அஞர் - துன்பம். பொருள் வயிற்
பிரிந்து போகும் தலைவனுக்குத் தோழி சொல்லியது இது.
 


     (பி - ம்.) 6. சேணிகந். 7. வஞ்சிப்பா.

- - -

குறள்வெண்பா, நேரிசைவெண்பா

  23. ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா
தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
நேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே.
 
     இ - கை. குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை
வெண்பா, 1நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் ;
நேரிசை யாசிரியப்பா, இணைக்குற ளாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா,
அடிமறிமண்டில வாசிரியப்பா எனவும் ; நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா,
அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா,
வெண்கலிப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக்
கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைச் கொச்சகக் கலிப்பா
எனவும் ; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா, எனவும் ; புறநிலை வாழ்த்து மருட்பா,
கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறூஉ மருட்பா எனவுங்
கிடந்த பாவிகற்
 

     (பி - ம்.) 1. சிந்தியல்வெண்பா வெனவும்.