| அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே. (iii) கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள் இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே. |
இவை மூன்றுந் தாழிசை. |
எனவாங்கு, |
இது தனிச்சொல் |
| 'இனைநல முடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே.' |
(கலி. 11) |
இது சுரிதகம். |
இஃது அளவடியானும் துள்ளலோசையானும் வந்தமையால் கலிப்பா. |
'கண்ணார் கொடிபோல் துளங்கிடை மாதே' எ - து. மகடூஉ முன்னிலை. |
'சுறமறி தொன்னலத்தின் புலம்பென்று உளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக்குதாரணம்' எ - து : |
| (4) 'சுறமறிவன துறையெல்லாம் இறவீன்பன வில்லெல்லாம் மீன்றிரிவன கிடங்கெல்லாம் தேன்றாழ்வன பொழிலெல்லாம் என வாங்குத் தண்பணை தழீஇய விருக்கை மண்கெழு நெடுமதின் மன்ன னூரே.' |
இஃது இருசீரடியானும் தூங்கலோசையானும் வந்தமையால் 3குறளடி வஞ்சிப்பா. |
|
(4) சுற - சுறாமீன். மறிவன - துள்ளுவன. இறவு - இறாமீன். கிடங்கு - அகழி. பணை - வயல். |
|
(பி - ம்.) 4. இனநல. 5. வஞ்சிப்பா. |