அகவற்கு உதாரணம் செங்களம் படக்கொன்று' எ - து : |
| (2) 'செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக் 3கழறொடிச் சேஎய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.' |
(குறுந். 1.) |
இஃது அளவடியானும் அகவலோசையானும் வந்தமையான் ஆசிரியப்பா. |
'கலிக்கு அரிதாய' எ - து : |
| (3) 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி' |
இது தரவு. |
| (i) அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாய் காடென்றா ரக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே. (ii) இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீய்ந்த வுலவையால் துன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள் |
|
(2) கோல் - திரண்ட. கழல் தொடி - கழலவிட்ட வீரவளை - சேஎப் - முருகன். அம்பையும் யானையையும் வளையையுமுடைய சேய். குருதிப்பூ - செந் நிறமலர். குலை - பூங்கொத்து காந்தட்டு - காந்தளையுடையது. தோழி கையுறை மறுத்தது இது. (3) அருளியோர்க்கு. தம்மை அருளவந்த அந்தணர் தாபதர் முதலியவர்களுக்கு. தெறுதல் - அழித்தல். புரிவு அமர் - மனம் பொருந்துதல் அமைந்த பொருள் அளித்தலும் தெறுதலும் புணர்ச்சியும் தரும் என. வலிப்பல் - துணிவேன். (i) துடிஅடிக்கயந்தலை - துடிபோலும் அடியையுடைய யானைக்கன்றுகள் (ii) உலவை - காய்ந்த மரக்கொம்புகள். (iii) கல் - மலை. வேய் - மூங்கில். கனைகதிர் - செறிந்த சூரிய கிரணங்கள். இனைநலம் - தலைவன் தலைவியை எண்ணி வருந்துவதற்குக் காரணமான நலங்கள்; இனைதல் - வருந்துதல் மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்தம். |
|
(பி - ம்.) 3. கழறொடீஇச். |