| மலர்கொண் டேத்தி வணங்குநர் பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே.' |
இஃது ஒன்றாத வஞ்சித் தளையான் வந்தமையால் அகவற் றூங்க லோசை. |
|
| 'மந்தாநிலம்..........மகிழ்ந்தே.' |
(கா. 11. மேற்.) |
இது பலதளையும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் தூங்க லோசை.] |
13 இவற்றிற்கு இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க. |
1 |
|
(பி - ம்.) 13. இவற்றுக்கு விருத்தி யாப்பருங். |
---- |
உதாரண முதனினைப்பு |
| 22. வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குகாரணஞ்செங் களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோற் றுளங்கிடை 1மாதே சுறமறி தொன்னலத் தின்புலபன் 2றுளங்கொடு நாவல ரோதினர் வஞ்சிக் குதாரணமே. |
இ - கை. அவ்வடியானும் ஓசையானும் வந்த இலக்கியங்கட்கு முதனினைப்புணர்த்....று. |
'வளம்பட வென்பது வெள்ளைக்கு' எ-து : |
| '(1) வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை அளந்தன போக மவரவ ராற்றான் விளங்காய் திரட்டினா ரில்லைக் - களங்கனியைக் காரெனச் செய்தாரு மில் ; |
(நாலடி. 103) |
இஃது அளவடியானும் செப்பலோசையானும் வந்தமையான் வெண்பா. |
|
(1) வளம்பட - செல்வம் முதலியவற்றால் பெருமைபெற. போகம். சுகங்கள். ஆற்றான் அளந்தன - ஊழ்வினையால் அளவு செய்யப்பட்டன. விளங் - காயும் களங்கனியும் விதைவிதை வழியே பின்பும் அப்படிப் பலித்தல் அல்லது திரளவும் கறுக்கவும் செய்தாரில்லை. |
|
(பி - ம்.) 1. மாதர். 2. றுளங்கொண்டு. |