துரைக்கப் பட்டது. சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் வரப்பெறும் எனக் கொள்க. (3) |
வரலாறு |
| 'நீல மாகட னீடு வார்திரை நின்ற போற்பொங்கிப் பொன்று 3மாங்கவை காலம்பல காலஞ் சென்றுபின் செல்வர் யாக்கை கழிதலுமே.' 'நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற் கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.' |
இவை நாற்சீரின் மிக்க பலசீரான் வந்த அடி யிரண்டாய் ஈற்றடி குறைந்து வந்த குறட்டாழிசை. |
| 'பிண்டியி னீழற் பெருமான் பிடர்த்தலை மண்டலந் தோன்றுமால் வாழி யன்னாய்.' '(4) அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி மறுவறு பத்தினி போல்வையி னீரே.' |
இவை விழுமிய பொருளும் ஒழுகிய வோசையு மின்றி இரண்டடியும் அளவொத்துச் செந்துறை வெள்ளையிற் சிதைந்து வந்தமையின் செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள். |
| 'வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள் பண்டைய ளல்லள் படி.' |
|
இது குறள் வெண்பாவிற் சிறிது செப்பலோசை சிதைந்து வந்த சந்த மழிந்த குறட்டாழிசை. |
(3) இதன்பின் சில பிரதிகளில், 'என்னை? ''ஈரடியாகிச் சீர்பல மிடைந்தே, அந்தடி குறைந்து வந்தினி தொழுகும், திறப்பா டுடைய குறட்டா ழிசையே'' என்றார் ஆகலின்' என்ற பகுதி காணப்படுகிறது. (4) கவுந்தி - குந்திதேச மன்னன்மகள்; பாண்டவரின் தாய். அறுவர்க்கு - சூரியன் முதலிய ஆறு பேருக்கு, அறுவரை - கன்னன் தருமன் முதலிய ஆறு பேரை. |
|
(பி - ம்.) 3. மாங்கடை. |