பக்கம் எண் :
 

செய்யுளியல் 'மூன்றடி யானு'

87

 
'(5) அந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளுந் தாழிசைக் குறளே'

'உரைத்தன விரண்டுங் குறட்பாவினமே'
 

என்பன யாப்பருங்கலம் (சூ. 64. 65)

(6)


      (5) அத்தடி - ஈற்றடி. சந்து அழி - சந்தம் சிதைந்த.
 

- - - -

வெண்டாழிசை. வெண்டுறை, வெளிவிருத்தம்

  27. மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்
தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண்டாழிசையே
மூன்றடி யாய்வெள்ளை போன்றிறு மூன்றிழி பேழுயர்பா
ஆன்றடி தாஞ்சில வந்தங் 1குறைந்திறும் வெண்டுறையே.
 
     இ.....கை, வெளிவிருத்தமும் வெண்டாழிசையும் வெண்டுறையும் ஆமாறு
உணர்த்......று.
 
     'மூன்றடியானும் முடிந்து அடிதோறும் முடிவிடத்துத் தான் தனிச் சொற்பெறுந்
தண்டா விருத்தம்' எ - து. மூன்றடியானும் முற்றுப் பெற்று அடிதோறும் இறுதிக்கண்
ஒரு சொல்லே வருவது வெளிவிருத்தம் எனப்படும் எ - று.
 
     'மூன்றடியானும்' என்ற உம்மையால் நான்கடியானும் வரப் பெறும் எனக் கொள்க.
என்னை?
    'ஒருமூன் றொருநான் கடியடி தோறுந்
தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை
விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே'
 
என்றார் காக்கைபாடினியார்.
 
     ['தண்டா விருத்தம்' என்று சிறப்பித்தவதனால் நாற்சீரடியுட் பட்டு அடங்காதே
வேறாய் வருவது ஈண்டுத் தனிச் சொல் ஆவதெனக் கொள்க.]
 

     (பி - ம்.) 1. குறைந்திடும்.