| 
        
       
        சொல்லுதல். இவ்வாறு சொல்லினவிடத்துத் தலைமகன் மாட்டுப் புலவியேகொள்ளக் கருதிச் சொன்னாளாம் என்பது. அதற்குச் செய்யுள்:
 
        
       
        தலைவி தற்புகழ்தல்
 
        
       
        ‘வெறிதரு பூந்தார் விசாரிதன் வேலைமுந் 
        நீர்வரைப்பின்
 நெறிதரு கோல்செல்லும் எல்லையுள் ளேமல்ல நீர்மையில்லாச்
 சிறியவர் வாழ்பதி யேயெமர் இல்லஞ் சிறிதெமக்கே
 எறிபுனல் ஊரஎவ் வாறும் அமையும்நின் இன்னருளே.’       
        (293)
 
        
       
        சூத்திரம்-49
 
        
       
        அவன்வயின் கிளப்பின் வரைவின் 
        பொருட்டே.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், இவ்வாறு சொல்லின் வரைவின்
 பொருட்டாகும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
 
 இதன் பொருள்: 
        அவன்வயின் கிளப்பின் என்பது - நாடும் ஊரும்
 இல்லும் சுட்டித் தலைமகனைச் சார்த்திச் சொல்லின் என்றவாறு;
 வரைவின்பொருட்டே என்பது-வரைதல் என்பது, நீக்கி நிறுத்தற் பொருளவாம்
 என்றவாறு.
 
 யாதினை நீக்கிநிறுத்தலோ எனின், புலவியை நீக்கி நிறுத்தல். 
        அஃது
 என்னை பெறுமாறு எனின், மேற்சூத்திரத்திற், ‘புலவி’ என்று அதிகாரம்
 வாராநின்றதாகலான் என்பது.
 
 
        
       
             பரத்தையை மறுத்தந்து வாயிலாற் புக்க தலைமகனை ஏற்றுஎதிர்கொண்டு வழிபட்டாள்; பின்னைக் காரணத்தின் நீங்கிய பொறாமைக்குக்
 காரணம் பெற்றுத் தோற்றிற்று. அது தோன்றத், தலைமகனை ஒன்றன்
 
        
       
        தலைக்கீடாகச் சொல்லுதல்; ‘எம்பெருமான், நீர் பெரிதாகிய நாட்டிற்பெரிதும்மிக்க ஊரிற் பெரிதும் மிக்க குலத்திற் பிறந்த பேரொழுக்கத்தினீர்க்குத்
 தக்கதே சிறியேமாகிய எந்திறத்துத் தலையளி!’ எனச் சொல்லுதல்; இவ்வாறு
 சொல்லுவாள் புலவி நீக்குவான் சொல்லிற்றாக என்பது; அவ்வாறு
 சொல்லியதற்குச் செய்யுள்:
 
        
       
        மிக்கீர்க்கிது தக்கதன்றென்றல்
 
        
       
        ‘வரியவண் டார்தொங்கல் மான்தேர் வரோதயன் 
        வல்லத்தொன்னார்
 கரியவை வேல்கொண்ட காவலன் காக்கும் கடலிடம்போல்
 பெரியநல் நாட்டிற் பெரியநல் லூரிற்பெரிய இல்லிற்
 குரியமிக் கீர்க்கியல் பன்றுகொல் இவ்வா றொழுகுவதே.’     
        (294)
 |