கலைமான் வினாதல்
‘சினமாண் கடற்படைச் சேரலன் தென்னறை யாற்றழிந்து
மனமாண் பழியவை வேல்கொண்ட கோன்வையை நாடனைய
கனமாண் வனமுலைக் கையார் வரிவளைக் காரிகையீர்
இனமான் புகுந்தது வோவுரை யீர்நும் இரும்புனத்தே’ (59)
‘சிலைமாண் படைமன்னர் செந்நிலத் தோடச் செருவிளைத்த
கொலைமா ணயில்மன்னன் தென்புனல் நாடன்ன கோல்வளையீர்
இலைமாண் பகழியி னேவுண்டு தன்னினத் திற்பிரிந்தோர்
கலைமான் புகுந்ததுண் டோவுரை யீர்நுங்கள் கார்ப்புனத்தே’ (60)
‘கண்ணுற் றெதிர்ந்ததெவ்வேந்தர் படக்கடை யற்கொடிமேல்
விண்ணுற்ற கோளுரு மேந்திய வேந்தன் வியன்பொதியிற்
பண்ணுற்ற தேமொழிப் பாவைநல் லீரோர் பகழி்மூழ்கப்
புண்ணுற்ற மானொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே’ (61)
வழி வினாதல்
‘வெல்லுந் திறநினைந் தேற்றார் விழிஞத்து
விண்படரக்
கொல்லின் மலிந்தசெ வேல்கொண்டகோன்கொல்லிச் சாரலின் தேன்
புல்லும் பொழிலிள வேங்கையின் கீழ்நின்ற பூங்குழலீர்
செல்லும் நெறியறி யேனுரை யீர்நுஞ் சிறுகுடிக்கே’ (62)
மொழிபெறாது கூறல்
‘தன்னும் புரையும் மழையுரு மேறுதன் தானைமுன்னால்
துன்னுங் கொடிமிசை ஏந்திய கோன்கொல்லிச் சூழ்பொழில்வாய்
மின்னுங் கதிரொளி வாள்முகத் தீரென் வினாவுரைத்தால்
மன்னுஞ் சுடர்மணி போதரு மோநுங்கள் வாயகத்தே’ (63)
என்பன கொள்க.
புதுவோன்போல என்பது-எஞ்ஞான்றும் அந் நிலத்துச் சென்று
அறியாதானும் அவரைக் கண்டறியாதானும் போல என்றவாறு; பொருந்துபு
கிளந்து என்பது-அந் நிலத்திற்கும் அவரை வினாதற்கும் பொருந்துவன
கிளந்து என்றவாறு; மதி உடம்படுத்தற்கும் உரியன் என்ப என்பது-மதி
என்பது அறிவு; அவ்வறிவினை ஒருப்படுத்தற்கும் உரியன் என்றவாறு.
யார் அறிவையோ எனில், தோழியறிவை எனக் கொள்க. அவளது
அறிவினை ஒருப்படுக்கும் எனவே, முன் கவர்ந்து நின்றது என்பது போந்தது.
எங்ஙனம் கவர்ந்து நின்றதோ எனின், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த
ஞான்றுட்கொண்டு கண்சிவந்து நுதல் வேறுபட்டுக் காட்டிற்று; ‘இவட்கு இவ் |