பக்கம் எண் :
 
139சொல்லுரிமை
கொடை வஞ்சியோடு குறுவஞ் சிய்யே, யொருதனி நிலையொடு தழிஞ்சி பாசறை,
பெருவஞ் சிய்யே பெருஞ்சோற்று நிலையொடு, நல்லிசை வஞ்சியென நாட்டினர்
தொகுத்த, வெஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும், வஞ்சியும், வஞ்சித் துறையுமாகும்."

     காஞ்சித்திணை வருமாறு. - "காஞ்சிகாஞ்சி யெதிர்வேதழிஞ்சி, பெரும் படை
வழக்கொடுபெருங்காஞ் சிய்யே, வாள்செல வென்றா குடையது செலவே, வஞ்சினக்
காஞ்சி பூக்கொணிலையே, புகழ்தலைக் காஞ்சி தலைமாராயந், தலையொடு முடிதன்
மறக்காஞ் சிய்யே,மாற்றரும் பேய்நிலை பேய்க் காஞ்சிய்யே, தொட்ட காஞ்சி
தொடாக்காஞ் சிய்யே,மன்னைக் காஞ்சி கட்காஞ் சிய்யே, யாஞ்சிக் காஞ்சி மகட்பாற்
காஞ்சி, முனைகடிமுன்னிருப் புளப்படத் தொகைஇ, யெண்ணிய வகையா னிருபத் திரண்டுங், கண்ணியகாஞ்சித் துறையென மொழிப."

     நொச்சித்திணை வருமாறு. - "நுவலருங் காப்பி னொச்சி யேனை, மறனுடைப் பாசி
யூர்ச்செரு வென்றா, செருவிடை வீழ்த றின்பரி மறனே, யெயிலது போரே யெயிறனை
யழித்த, லழிபடை தாங்கன் மகண் மறுத்து மொழித லென, வெச்ச மின்றி யெண்ணிய
வொன்பது, நொச்சித் திணையது வகை யென மொழிப."

     உழிஞைத்திணைவருமாறு. - "உழிஞையோங்கிய குடைநாட்கோளே, வாணாட்
கோளேமுரசவுழிஞை, கொற்றவுழிஞையோ டரசவுழிஞை, கந்தழி யென்றா முற்றுழிஞ்
ஞையே,காந்தள் புறத்திறை யாரெயி லுழிஞை, யருந்தொழி லுழிஞை குற்றுழி
ஞைய்யொடு,கேட்புறத் துழிஞை பாசிநிலையே, யேணி நிலையே யிலங்கெயிற் பாசி,
முதுவுழிஞையேமுந்தகத் துழிஞை, முற்று முதிர்வே யானைகைக் கோளே, வேற்றுப்
படைவரவேயுழுதுவித் திடுதல், வாண் மண்ணு நிலையே மண்ணு மங்கலமே, மகட்
பாலிகலேதிறைகொண்டு பெயர்த, லடிப்பட விருத்த றொகை நிலையுளப்பட, விழுமென்
சீர்த்தியிருபத் தொன்பது, முழிஞை யென்மனா ருணர்ந்திசி னோரே."

     தும்பைத்திணை வருமாறு. - "துன்னருங் கடும்போர்த் தும்பை தும்பை யரவந்,
தன்னிகரில்லாத் தானை மறமே, யானை மறத்தொடு குதிரை மறமே, தார்நிலை
தேர்மறம்பாணது பாட்டே, யிருவருந் தபுநிலை யெருமை மறமே, யேம வெருமை நூழி
லென்றா,நூழி லாட்டே முன்றேர்க் குரவை, பின்றேர்க் குரவை பேய்க்குர வைய்யே,
களிற்றுடனிலையே யொள்வா ளமலை, தான நிலையே வெருவரு நிலையே, சிருங்கார
நிலையேயுவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்ட றொகைநிலை யுளப்பட, நன்பொரு
டெரிந்தோர்நாலிரு மூன்றும், வண்பூந் தும்பை வகையென மொழிப." - சூத்திரம். -
"வெட்சிகரந்தை வஞ்சி காஞ்சி, யுட்குடை யுழிஞை நொச்சி தும்பையென், றித்திர
மேழும்புறனென மொழிப. - வாகை பா