மகவற்சீரெனவும் பெயர்பெறும். (வ-று.) "குன்றக் குறவன் காதன் மடமகள் வரையர மகளிர் புரையுஞ் சாயல ளைய ளரும்பிய முலையள் செய்ய வாயினண் மார்பினள் சுணங்கே." இவ்வகவலுள், குன்றத் - தேமா, குறவன் - புளிமா, காதன் - தேமா, மடமகள் - கருவிளம், வரையர - கருவிளம், மகளிர் - புளிமா, புரையுஞ் - புளிமா, சாயல - கூவிளம், ஈரசைச்சீர் நான்கும் வந்தன காண்க. யாப் பருங்கலம். - "ஈரசை கூடியசீ ரியற்சீ ரிவை, யீரிரண் டென்ப வியல்புணர்ந்தோரே." என்றார். அன்றியும், உரிச்சீர் மூவசைச் சீராய் நேரீற்றுரிச்சீர் நிரையீற்றுரிச்சீரென விருவகையவாகி யிரு நான்காகும். இவற்றுணேரீற் றுரிச்சீர் நான்கும் வெண்பாவிற் குரியவாதலின் வெண்சீ ரெனப்படும். நிரையீற் றுரிச்சீர் நான்கும் வஞ்சிப்பாவிற்குரிய வாதலின் வஞ்சிச்சீ ரெனப்படும். நேரீற் றுரிச்சீர்க் குதாரண வாய்பாடு. நேர் நேர் நேர் - தேமாங்காய், நிரைநேர்நேர் - புளிமாங்காய், நிரைநிரைநேர் - கருவிளங்காய், நேர்நிரை நேர் - கூவிளங்காய், இவை வெண்பாவிற்குரிய வெண்சீ ரெனப்படும். (வ-று.) "நாய்க்காற் சிறுவிரல்போ னன்கணிய ராயினு, மீக்காற் றுணையு முதவாதார் - நட் பென்னாஞ், சேய்த்தானுஞ் சென்றுகொளல் வேண்டுஞ் செய்விளைக்கும், வாய்க்கா லனையார் தொடர்பு." இவ்வெண்பாவினுள் நாய்க்காற் - தேமா, சிறுவிரல்போ - கருவிளங்காய், னன்கணிய - கூவிளங்காய், ராயினு - கூவிளம், மீக்காற் - தேமா, றுணையு - புளிமா, முதவாதார் - புளிமாங்காய், நட்பென்னாஞ் - தேமாங்காய், காய்ச்சீ ரிறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் வந்தன காண்க. - சூத்திரம். - "காய்முன் னேரும் விளமுன் னேரு, மாமுன் னிரையும் வருமெனமொழிப." என்றா ரொருசா ராசிரிய ரவ்வாறு வருதலறிக. அன்றியும், நிரையீற்றுரிச்சீர்க் குதாரண வாய்பாடு. நேர்நேர்நிரை - தேமாங்கனி, நிரைநேர்நிரை - புளிமாங்கனி, நிரைநிரைநிரை - கருவிளங்கனி, நேர்நிரைநிரை - கூவிளங்கனி, இவைவஞ்சிப் பாவிற்குரிய வஞ்சிச்சீ ரெனப்படும்.(வ-று.) "பூந்தாமரைப் போதலமரத், தேம்புனலிடை மீன்றிரிதரும், வளவயலிடைக் களவயின்மகிழ், வினைக்கம்பலை மனைச்சிலம்பவு, மனைச்சிலம்பிய மணமுரசொலி, வயற்கம்பலைக் கயலார்ப்பவு, நாளு மகிழு மகிழ்தூங்குரன், புகழ்தலானாப் பெருவண்மையனே." இவ்வஞ்சிப் பாவினுள், பூந்தாமரைப் - தேமாங்கனி, போதலமரத் - கூவிளங்கனி, தேம்புனலிடை - கூவிளங்கனி, மீன்றிரிதரும் - கூவிளங்கனி, வளவய லிடைக் - கருவிளங்கனி, களவயின்மகிழ் - கருவிளங்கனி, வினைக்கம் பலை - புளிமாங்கனி, கனிச்சீ ரிறுதியாகிய மூவசைச்சீர் நான்கும் வந்தன காண்க.-யாப்பருங்கலம். - "மூவசைச் சீருரிச் சீரிரு நான்கனு, ணேரிறு நான்கும் வெள்ளை யல்லன, பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே." என்றார். அன்றியும், பொதுச்சீர் நாலசைச்சீராய் நானான்காகும். இவையே இயற்சீர் நான்கிற்கு மிறுதியின் கண்ணே தண்ணிழலென நேர்நிரையும், தண் பூவென நேர்நேரும், நறும்பூவென நிரைநேரும், நறுநிழலென நிரை நிரையுங், கூட்டிற் பதினாறாகும். இவற்றிற் குதாரண வாய்பாடு. தேமாந் |
|
|