பக்கம் எண் :
 
203செய்யுண்மரபியல்
   
     பெருமகிழ்ச்சி மாலை:- தலைவியி னழகு குண மாக்கஞ் சிறப் பினைக் கூறுவது.
 
     மெய்க்கீர்த்திமாலை:- சொற் சீரடி யென்னுங் கட்டுரைச் செய்யுளாற் குலமுறையிற்
செய்த கீர்த்தியைக் கூறுவது.
 
     காப்பு மாலை:- தெய்வங் காத்தலாக மூன்று செய்யுளானும் ஐந்து செய்யுளானும்
ஏழ்செய்யுளானும் பாடுவது.
 
     வேனின் மாலை:- வேனிலையு முதிர் வேனிலையுஞ் சிறப்பித்துப் பாடுவது.
 
     வசந்த மாலை:- தென்றலை வருணித்துப் பாடுவது.
 
     தாரகை மாலை:- அருந்ததிக் கற்பின் மகளிர்க்குள்ள வியற்கைக் குணங்களை
வகுப்பாற் கூறுவது. தூசிப்படையி னணியைப் புகழ்ந்த வகுப் பென்பாரு முளர்.
 
     உற்பவ மாலை:- திருமால் பிறப்புப் பத்தனையு மாசிரிய விருத்தத்தாற் கூறுவது.
 
     தண்டக மாலை:- வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது. இதுவே
புணர்ச்சிமாலை யெனவும் படும்.
 
     வீரவெட்சிமாலை:- சுத்த வீரன் மாற்றாரூரிற் சென்ற பசுநிரைகோடற்கு வெட்சிப்
பூமாலை சூடி யவ்வண்ணம் போய் நிரைகவர்ந்துவரி லவனுக்கு முன்பு தசாங்கம்
வைத்துப் போய் வந்த வெற்றிப் பாடுவது.
 
     வெற்றிக்கரந்தை மஞ்சரி:- பகைவர் கொண்ட தந்நிரை மீட்போர் கரந்தைப்
பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது.
 
     போர்க்கெழுவஞ்சி:- மாற்றார்மேற் போர் குறித்துப் போகின்ற வய வேந்தர்
வஞ்சிப் பூமாலை சூடிப் புறப்படும் படையெழுச்சிச் சிறப்பை யாசிரியப்பாவாற் கூறுவது.
 
     காஞ்சி மாலை:- மாற்றா ரூர்ப்புறத்துக் காஞ்சிப்பூமாலை குடியூன்றலைக் கூறுவது.
 
     நொச்சிமாலை:- புறத்தூன்றிய மாற்றார்க் கோடலின்றி நொச்சிப் பூ மாலைசூடித்
தன் மதில்காக்குந் திறங்கூறுவது.
 
     உழிஞைமாலை:- மாற்றார தூர்ப்புறஞ்சூழ வுழிஞைப் பூமாலை சூடிப் படை
வளைப்பதைக் கூறுவது.
 
     தும்பை மாலை:- மாற்றாரொடு தும்பைப் பூமாலை சூடிப் பொருதுவதைக்கூறுவது.
 
     வாதோரணமஞ்சரி:- கொலைபுரி மதயானையை வயப்படுத்தி யடக்கின வர்கட்கும்,
எதிர்பொரு களிற்றை வெட்டி யடக்கினவர்கட்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவர்கட்கும்,
வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப் பாவாற் றொடுத்துப் பாடுவது.