பக்கம் எண் :
 
216தொன்னூல்விளக்கம்
தமுதூட்டினாற் போலக் கேட்போருவப்ப வின்பமிகுத்து வருங் கவி மதுரமெனப்படும்.
(வ-று) கலித்துறை. "கந்தாரம் பாடிக் களித்தாடும் வண்டினங் காமுறுபூஞ், சந்தார நாறு
நிழற்சோலைக் காவலூர்த் தங்கியவா, னிந்தாரம் பூண்ட திருவடிகண் டேத்த
வெவ்வுயிரும், வந்தாரக் கண்பேனோ வானலங் கொண்டார் வையகமே." எ-ம்.
பிறவுமன்ன. அன்றியுங் கோமுத்திரி முதலினி யணியதிகாரத்துட் காட்டும்படியே வழங்கு
மிருபது மிறைக்கவியைச் சித்திரக்கவி யென்மருமுள ராயினு மவை சிறுபான்மையென்று
மதியார் புலமையின் மிக்கோர். ஆகையி லோரிலைமுதலா நுணுக்கத்தனைத்து
மொழுங்கொடுதோன்ற வெழுதிய சித்திரப்படத்தைக் காட்டின தன்மையிற் பாடிய
கவியைச் சித்திர மென்பார். (வ-று) நைடதம். - "விழைவுறு கலவியின் மெலிந்தோர்
தாளினின், றெழிறிகழ் பொன்னிற வெருத்தங் கோட்டுபு, தழைவுறு சிறகரான் மூடித்
தண்ணறா, வழிமலர் சேக்கையி னன்னந் துஞ்சுமால்.' எ-ம். சித்திரவணியாவன. -
யாப்பருங்கலம் முடிவுச் சூத்திரம். - "மாலைமாற்றே சக்கரஞ்சுழிகுள, மேக பாத
மெழுகூற் றிருக்கை, காதை காப்பே கரந்துறைப் பாட்டே, தூசங் கொளலே வாவன
ஞாற்றிக், கூட சதுக்கங் கோமூத் திரியே, யோரெழுத் தினத்தா லுயர்ந்த பாட்டே, பாத
மயக்கே பாவிற் புணர்ப்பே, யொற்றுப் பெயர்த்த லொரு பொருட் பாட்டே, சித்திரக்
காவே விசித்திரக் காவே, விகற்ப நடையே வினா வுத்தரமே, சருப்பதோ பத்திரஞ்
சார்ந்த வெழுத்தும், வருக்கமு மற்றும் வடநூற் கடலு, மொருங்குடன் வைத்த வுதாரண
நோக்கி, விரித்து முடிப்ப மிறைகவிப் பாட்டே, யுருவக மாதி விரவிய லீறாய், வருமலங்
காரமும் வாழ்த்தும் வசையுங், கவியே கமகன் வாதி வாக்கியென், றவர்க டன்மையு
மவ்வயி னமைதியும், பாடுதன் மரபுந் தாரணைப் பகுதியு, மானந்த முதலிய வூனச்
செய்யுளும், விளம்பினத் தியற்சையு நரம்பின் விகற்பமும், பண்ணுந் திறனும் பாலையுங்
கூட்டமு, மெண்ணிய திணையு மிருதுவுங் காலமு, மெண்வகை மணமு மெழுத்துஞ்
சொல்லுஞ், செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும், தந்திர யுத்தியுந் தருக்கமு
நடமு, முந்துநூன் முடிந்த முறைமையின் வழாமை, வந்தன பிறவும் வயினறிந்
துரைப்போ, னந்தமில் கேள்வி யாசிரியன்னே." என்றா ரமுத சாகர வாசிரியர். -
மாலைமாற்றாவது:- மீள வாசித்தாலு மதுவே வரப்பாடுவது. சக்கரமாவது:- நான்காரைச்
சக்கரமும் எட்டாரைச் சக்கரமும், ஆறாரைச் சக்கரமும் வரப்பாடுவது. சுழிகுளமாவது:-
நெட்டெழுத் தியன்ற நால்வரி யாக வெழுதி சுழித்து வாசிக்கச் செய்வது.
ஏகபாதமாவது:- நான்கடியு மோரடியாகப் பாடி யடிகடோறும் வேறு பொருள்
விளக்குவது. எழு கூற்றிருக்கையாவது:- ஏழறை யாக்கிக் குறுமக்கண் முன்னின்றும்
புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியால் வழுவாமை யொன்று முதலாக
வேழிறுதியாக முறையானே பாடுவது. காதை காப்பாவது:- அணியதிகாரத்துட் காண்க.
கரந்துறைப் பாட்டாவது.- ஒரு பாட்டைச்செவ்வையே யதனா