லீற்று மாதிக்கு முதலா மெழுத்துத் தொடங்கி யொன்று விட்டு வாசிக்க மற்றொரு பாட்டாவதாம். தூசங் கொளலாவது:- ஒருவ னொருவெண்பாச் சொன்னா லதனீறே யீறாக வதன் முதலே முதலாக மற்றொரு வெண்பாப் பாடுவது. ஞாற்றியாவது:- முந்துறக் கொடுத்த வெழுத்துக் கீறு பாடிப் பின்னைக் கொடுத்த வெழுத்துக் கீற்றயல் பாடி யதன் பின்பு கொடுத்த வெழுத்துக் கிரண்டாமடிபாடி யதன்பின்பு கொடுத்த வெழுத்திற் பாடி முடிப்பது. கூடசதுக்கமாவது:- நாலா மடியு முன்னின்ற மூன்றடியும் பெருக்கிக் கொள்வது. கோமூத்திரி யாவது:- இரண்டு வரியாக வெழுதி கோ மூத்திரம் விட்டது தோன்றும் வளைவுபோல வாசிக்கப் பாடுவது. ஓ ரெழுத்தாலு மோரினத்தாலு முயர்ந்த பாட்டாவன:- ஓ ரெழுத்தாலே முடியப் பாடுவது. மூவினத் தாலே முடியப் பாடுதல் செய்வது. மூவினமாவன: - வலி மெலி இடை. பாதமயக்காவது:- மூவர் மூன்றாசிரிய மூவடச் சொன்னாற் றானோரடி சொல்லிக் கிரியைக் கொடுப்பது. பாவிற் புணர்ப்பாவது:- நால்வர் நான்கு பாவிற் பாட்டுரை சொன்னா லிவனடிக்கு முதலாகப் பாடி பொருண் முடிப்பது. ஒற்றுப் பெயர்த்தலாவது:-ஒரு மொழியைப் பாடி நிறுத் திறுத்தி வைத்துப் பிறி தொரு பொருள் பாடுவது. ஒரு பொருட் பாட்டாவது:-ஒன்றனையே யணித்துப் பாடுவது. சித்திரக் காவாவது:- நான்கு கூடிய வெல்லாம் பத்தாகவு மூன்று கூடின வெல்லாம் பதினைந்தாகவும் பிறவாற்றானு மெண் வழுவாமற் பாடுவது. விசித்திரக்காவாவது:-எங்கு மேழறை யாகக் கீறி மேலே யொழுகி நுண்மொழி முதலாகிய வெழுத்தொரு பொருள் பயக்க நிறுவி யவ்வெழுத்துக்களே யெங்கு மொழுகுங் கண்ணறைவும் பாடமே நிறுவி யோரெழுத்துக் கோரடிவர யாதானு மொரு சீராகவானும் பாடுவது. விகற்ப நடை யாவது:-வேறுபட்ட நடையுடைத்தாகப் பாடுவது. வினாவுத்தரமாவது:- வினாவிற்கு விடை யளிக்கப் பாடுவது. சருப்பதோ பத்திரமாவது:- எட்டெழுத் தீன்ற நான்குமா யவை மாலைமாற்றுஞ் சுழிகுளமு மொருங்கு வரப் பாடுவது. சார்ந்தவெழுத்தாவது:- ஓ ரெழுத்து முதலாக கலை சிறந்தேறிய வெழுத்தின் முறையே பொருள் பயக்கப் பாடுவது. வருக்கமாவது:- மொழிக்கு முதலாம் வருக்க வெழுத்தினுக் கொவ்வோர் செய்யுட் கூறுவது. உருவக முதலாகிய வணிகளை யலங்காரத்திற் கண்டு கொள்க. வாழ்த்திருவகைப்படும். - வாயுறை வாழ்த்தும், புறநிலைவாழ்த்தும். வாயுறை வாழ்த்தாவது:-வேம்புங் கடுவும் போல்வ னவாகிய வெஞ்சொற்கண் முன்னர்த்தாங்கக் கூடா வாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்றருமென மெய்ப்பொருளுற வெண்பா முதலு மாசிரிய மிறுதியாகக் கூறுவது. புறநிலைவாழ்த்தாவது:- வழிபடு தெய்வ நிற்புறங்காப்பப் பழிதீர செல்வமோ டொருகாலைக் கொருகாற் சிறந்து பொலிவாயென வெண்பா முதலு மாசிரிய மிறுதியு மாகப்பாடுவது. அன்றியும். - வெண்பா. - "கார்நறு நீலங் கடியகத்து வைகலு, நீர்நிலை நின்ற |
|
|