பக்கம் எண் :
 
228தொன்னூல்விளக்கம்

இடையீரடிக்கண்ணு மடக்குதலும், இரண்டா மடிக் கண்ணு மீற்றடிக்கண்ணு மடக்குதலும்,
என்னு மாறு மீரடிமடக்கும், ஈற் றடியொழித்தேனை மூன்றடிக்கண்ணு மடக்குதலும்,
ஈற்றயலடி யொழித் தேனை மூன்றடிக்கண்ணு மடக்குதலும், முதலயலடி யொழித்தேனை
மூன்றடிக்கண்ணு மடக்குதலும், முதலடி யொழித்தேனை மூன்றடிக்கண்ணு மடக்குதலும்,
என்னு நான்கு மூன்றடிமடக்கும், நான்கடியு மடக்குதன் முற்றுமடக்கும், இவை
பதினைந்தும் மேற்கூறிய வேழு கூறுபாட்டோடு முறழ நூற்றைந்து வகைப்படும். அவை
இடையிடாதனவும், இடையிட் டனவும், இடையிட்டு மிடையிடாதனவும், என்னு
மூவகையோடு முறழ முந்நூற்றொருபத்தைந்து வகைப்படும். அவற்றுள் சிலவருமாறு:-
(வ-று.) "துறைவா துறைவா பொழிற்றுணைவா நீங்க, வுறைவார்க்கு முண்டாங் கொல்
செல்வஞ் - சிறைவாங்கிப், பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள் வாய், வாடைக்
குருகார் மனம்." எ-து. முதலடி முதன்மடக்கு. "கனிவா யிவள் புலம்பக் காவனீ னீங்கி,
லினியாரினியா ரெமக்குப் - பனிநா, ளிரு வராய்த் தாங்கு முயிரின்றி யெங்குண்,
டொருவராய்த் தாங்கு முயிர்." எ-து. இரண்டாமடி முதற்கண்மடக்கு. "தேங்கானன்
முத்தலைக்குந் தில்லைத் திருநடஞ்செய், யோங்காரத்துட் பொருளா மொண்சுடர்க்கு -
நீங்கா, மருளா மருளாதரித் துரைக்கு மாற்றம், பொருளாம் புனைமாலை யாம்." எ-து.
மூன்றாமடி முதன்மடக்கு. "இவளளவுந் தீயுமிழ்வ தென்கொலோ தோயுங், கவள
மதமான் கடமுந் - திவளு, மலையார் புனலருவி நீயணுகா நாளின், மலையா மலையா
னிலம்." எ-து. ஈற்றடி முதன்மடக்கு. இவை நான்கு மோரடி மடக்கு. "நினையா
நினையா நிறைபோயகலா, வினையாவினையா மிலமா - நனையார், குரவாருங் கூந்தற்
குமுதவாய்க் கொம்பின், புரவா ளரிபிரிந்த போது.' எ-து. முதலீரடிமடக்கு. "அடையா
ரடையா ரரணழித்தற் கின்ன, லிடையாடு நெஞ்சமே யேழை - யுடைய, மயிலா
மயிலாமதர் நெடுங்கண் மாற்றங், குயிலாமென் றெண்ணல் குழைந்து." எ-து. முதலடியு
மூன்றா மடியு மடக்கு. "மானவா மானவா நோக்கின் மதுகரஞ்சூழ், கானவாங் கூந் தலங்
காரிகைக்குத் - தேனெ, பொழியாரந் தார்மேலு நின்புயத்து மேலுங், கழியா கழியா
தரவு." எ-து. முதலடியு மீற்றடியு மடக்கு. "மாத ருயிர்தாங்க வள்ளல்வரு நெறியிற்,
பேதுநோய் செய்யும் பெரும்பாந்தள் - யாதும், வரையா வரையா வெனுமா மதமா,
விரையா விரையா வெழும்." எ-து. கடையீரடிமடக்கு. "குரவார் குழலாள் குயின்மென்
மொழிதாம், விரவாவிரவா மென்றென்ற - லுரவா, வரவா வரவாமென நினையார்
வையம், புரவா ளர்க் கீதோ புகழ்." எ-து. இடையீரடிமடக்கு. "மழையார்
கொடைத்தடக்கை வாள்கைய னெங்கோன், விழையார் விழையார் மெல்லாடை -
குழையா, விழையா முணவுங் கனியா மினமு, முழையா முழையா முறை." எ-து.
இரண்டாமடியு மீற்றடியு மடக்கு. இவையாறு மீரடிமடக்கு. "இறைவா விறைவால்
வளைகாத் திருநதியா, ருறைவா ருறைவார் புயலா - னறைவாய்,