வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக், கண்டளவு நீர்பொழியுங் கண்." எ-து. ஈற்றடியொழித்தேனை மூன்றடிமடக்கு. "மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயுங், கலையுங் கலையுங் கடவுந் - தொலைவி, னமரி யெமக்கா மென்னு முன்னிற், குமரி குமரிமேற் கொண்டு." எ-து. ஈற்ற யலடியொழித்தேனை மூன்றடியுமடக்கு. "கொடியார் கொடியார் மதின்மூன்றுங் கொன்று, படியார் பணைத்தடக்கை நால்வாய்க் - கடியா, ருரியா ருரியாரெனை யாள வோதற், கரியார் கரியார் களம்." எ-து. முதலயலடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. "பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வேய்ந்தன்றே, மாலைவாய்மாலைவா யின்னிசை - மேலுரையே, மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டார், காவலர் காவலாங் கால்." எ-து. முதலடியொழித்தேனை மூன்றடியுமடக்கு. இவை நான்கு மூன்றடி மடக்கு. "வரைய வரைய சுரஞ்சென்றார் மாற்றம், புரைய புரையவெனப் பொன்னே - யுரைய, னனையா யனையாதொடை நம்மை வேய, வினையா வினையா விரைந்து." எ-து. முற்றுமடக்கு. இவை நான்கு மூன்றடி மடக்கு. இவை பதினைந்து மடிமுதன்மடக்கு. "மனமுங் குழைய குழைய வாமாந்த, ரினநீங் கரிய கரிய - புனைவனத், துளவாவி வாவிகயல் வாட்டு மென்னுள்ளங், களவாள வாளவாங் கண்." எ-து. இடைமுற்றுமடக்கு. ஒழிந்த விடைமடக்கும் வந்துழிக்காண்க. "மாலை மருளாது வஞ்சியான் வஞ் சியான், மேலை யமரர் கடைவேலை - வேலை, வளையார் திரைமேல் வருமன்ன மன்ன, விளையா ளிவளை வளை." எ-து. இறுதிமுற்றுமடக்கு. ஒழிந்தவிறு திமடக்கும் வந்துழிக்காண்க. "கொண்டல் கொண்டலா பொழிறொறும் பண்ணையாய்ப் பண்ணையாய்த் துள்ளார, வண்டல் வண்டலாய்த் தாது கொண்டியற்றலான் வருமணன் மணன்முன்றிற், கண்டல் கண்டனர் மகிழ்செய்ய| வோதிமங் கலந்துறை துறைவெள்ள, மண்டன் மண்டல முழுதுடன் வளைதரு வளைதரு மணிவேலை." எ-து. முதலு மிடையு மடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்தவாதியோ டிடைமடக்கும் வந்துழிக்காண்க. "நிரையார் நிரையா மணுபோ னிறைகோடல் கோடல், வரையார் வரையா ரிரு ண்முன் வருமாலை மாலை, விரையா விரையா வெழுமின் னொளிர்மேக மேக, முரையா ருரையா ரினுமொல் லெனுமுல்லை முல்லை." எ-து. முதலுங்கடையு மடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்தவாதியொடு கடைமடக்கும் வந்துழிக்காண்க. "வருகம் புளினம் புளினம் பயில்வேலை வேலை, யொருகா லுலாவா வுலவாரு மோத மோதம்,வருகே தகைகே தகைசேர் தருமன் னமன்ன, பெருகா தனகா தனவேசை மாதர் மாதர்." எ-து. இடையுங்க டையுமடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்த விடையொடு கடைமடக்கும் வந்துழிக்காண்க. "களைகளைய முளரியரு கடைகடைய மகளிர் கதிர்மணியு மணியும், வளைவளைய கரதலமு மடைமடைய மதுமலரு மலையமலைய, விளைவிளையர் கிளைவிரவி யரியரியின்மிசை குவளைமலரு மலருங், கிளைகிளை கொ ளிசையளிகண் மகிழ்மகிழ்செய் கெழுதகைய மருதமருதம்." எ-து. மூன்றிடத்துமடக்கிய முற்றுமடக்கு. ஒழிந்த முழுமடக்கும் வந்துழிக்கா |
|
|