பக்கம் எண் :
 
28தொன்னூல்விளக்கம்
மாமீக்கே.' (உ-ம்.) பீகுறிது, நீகுறியை, மீகண், மீக்கண். (சூ.) 'விகாரமனைத்து
மேவலதியல்பே.' (உ-ம்.) பொன்மணி, ஒளிமணி. (சூ) 'மூன்றுறுருபெ
ண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்.' (உ-ம்.) சாத்தனொடு சென்றான்,
சாத்தனதுதலை, ஒருகை, அடுகளிறு, அதுகுறிது. (சூ.) 'வன்றொடரல்லன
முன்மிகாவல்வழி.' (உ-ம்.) நாகுகடிது. எஃகுசிறிது, வரகுதீது, குரங்குபெரிது,
தெள்குகொடிது, ஏகுகால். (சூ.) 'இடைத்தொட ராய்தத் தொடரொற்றிடையின், மிகாநெடி
லுயிர்த்தொடர் முன்மிகாவேற்றுமை.' (உ-ம்.) தெள்கின்கடுமை, எஃகின்கடுமை,
நாகின்கடுமை, வரகின்கடுமை. (சூ.) 'இடைச்சொல்லேயோ முன்வரினியல்பே.' (உ-ம்.)
அவனேகொண்டான், அவனோகொண்டான். (சூ.) 'அல்வழி இஐம்முன்னராயி,
னியல்புமிகலும் விகற்பமுமாகும்.' (உ-ம்.) பருத்திகுறிது, யானைகுறிது, கிளிக்குறிது,
தினைக்குறிது, சில சூத்திரத்துண் மிக்கதறிக. அன்றியும், விகாரப்புணர்ச்சிவருமாறு. (சூ.)
'ஒருபுணர்க்கிரண்டுமூன்று முறப்பெறும். (உ-ம்.) யானைக்கோடு, நிலப்பனை, பனங்காய்.
(சூ.) 'தோன்றறிரிதல் கெடுதல்விகார, மூன்றுமொழி மூவிடத்துமாகும்.' (உ-ம்.) பூங்கொடி,
பஃறலை, நிலவலயம். (சூ.) 'மரப்பெயர் முன்னரினமெல்லெழுத்து, வரப்பெறுனவு
முளவேற்றுமைவழியே.' (உ-ம்.) விளங்காய், மாங்கொம்பு, (சூ.) 'சுவைப் புளிமுன்னின,
மென்மையுந்தோன்றும்.' (உ-ம்.) புளிங்கறி, புளியஞ்சோறு, புளிந்தயிர், புளிம்பாளிதம்.
(சூ.) 'தெங்குநீண்டீற்றுயிர், மெய்கெடுங்காய்வரின்.' (உ-ம்.) தேங்காய். (சூ.) சாவவென்
மொழியீற்றுயிர் மெய்சாதலும் விதி.' (உ-ம்.) சாக்குத்தினான். (சூ.) 'பூப்பெயர்
முன்னினமென்மையுந்தோன்றும்.' (உ-ம்.) பூங்கொடி, பூஞ்சோலை, பூம்பனை. (சூ.)
'ஆமுன்பகரவீய னைத்தும்வரக் குறுகுமேலன வல்வழி யியல்பாகும்மே.' (உ-ம்.)
ஆப்பியரிது, ஆப்பிகுளிரும், ஆப்பிநன்று, ஆப்பிவலிது. (சூ.) 'பனைமுன்கொடிவரின்
மிகலும்வலிவரி, னைபோயம்முந்திரள்வரினுறழ்வு, மட்டுறினைகெட்டந்நீள்
வுமாம்வேற்றுமை.' (உ-ம்.) பனைக்கொடி, பனந்தூண், பனாட்டு, பனந்திரள். (சூ.)
'வேற்றுமையாயினைகானிறுமொழி, யீற்றழிவோடு மம்மேற்பவுமுளவே.' (உ-ம்.)
புன்னையங்கானல், வழுதுணங்காய், ஆவிரம்வேர். (சூ.) 'நெடிலோடுயிர்த்
தொடர்குற்றுகரங்களுட், டறவொற்றிரட்டும் வேற்றுமை மிகவே.' (உ-ம்.) ஆட்டுக்கால்,
சோற்றுப்பனை, முயிற்றுக்கால், முருட்டுக்கால், காட்டரண். (சூ.)
'ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன்முன்வ ல்லினமியல் பொடுவிகற்பே.' (உ-ம்.)
உண்டிசாத்தா, உண்டனைசாத்தா, உண்டாய்சாத்தா, உண்டனீர்சாத்தரே, எறிசாத்தா,
விடுசாத்தா, ஆய்சாத்தா, வாழ்சாத்தா, நடக்கொற்றா, எய்க்கொற்றா. (சூ.) 'மென்றொடர்
மொழியுட் சிலவேற்றுமையிற், றம்மினம்வன்றொட ராகாமன்னே.' (உ-ம்.) மருத்துப்பை,
கருப்புவில், கற்றா. (சூ.) 'இயல்பினும்விதியினு நின்றவுயிர் முன் க ச த ப மிகும்
விதவாதனமன்னே.' (உ-ம்.) ஆடூஉக்குறியன், தாராக்கடிது,