பக்கம் எண் :
 
29மூன்றாவதெழுத்தின்விகாரம்
ஒற்றைக்கை, ஆடிக்கொண்டான், பூத்துக்காய்த்தது, பொள்ளெ னப்பறந்தது, ஏரிகரை,
குழந்தைகை. (சூ.) 'அகமுனர்ச்செவிகை வரினி டையனகெடும்.' (உ-ம்.) அஞ்செலி,
அங்கை. (சூ.) 'வல்லேதொழிற்பெயரற் றிருவழியும், பலகைநாய்வரினும்
வேற்றுமைக்கவ்வுமாம்.' (உ-ம்.) வல்லுக்கடிது, வல்லப்பகை, வல்லநாய். (சூ.)
'வவ்விறுசுட்டிற் கற்றுறல்வழியே.' (உ-ம்.) அவற்றை, இவற்றை. (சூ.) 'சுட்டின்முன்
னாய்தமன்வரிற் கெடுமே.' (உ-ம்.) அதனை. (சூ.) 'அத்தினகரமகரமுனையில்லை.' (உ-ம்.)
மகத்துக்கை, மரத்துக்குறை. (சூ.) 'நவ்விறுதொழிற்பெயர்க் கவ்வுமாம்வேற்றுமை.' (உ-ம்.)
பொருநக்கடுமை. (சூ.) 'புள்ளும்வள்ளுந் தொழிற்பெயருமானும்.' (உ-ம்.) புள்ளுக்கடிது,
வள்ளுக்கடிது. (சூ.) 'இல்லெனின்மைச் சொற்கையடைய, வன்மை விகற்பமுமாகாரத்தொடு,
வன்மையாகலுமி யல்புமாகும்.' (உ-ம்.) இல்லைப்பொருள், இல்லைபொருள்,
இல்லாப்பொருள், இல்பொருள். (சூ.) 'மீன்றவ்வொடுபொரூஉம் வேற்றுமைவழியே.'
(உ-ம்.) மீற்கண். (சூ.) 'மவ்வீறொற்றழிந்துயிரீறொப்பவும், வன்மைக்கினமாத்திரி
பவுமாகும்.' (உ-ம்.) வட்டவாழி, வட்டக்கடல், வட்டவாரி. (சூ.) 'ஈமுங்
கம்முமுருமுந்தொழிற்பெயர்மானு, முதலனவேற்றுமைக்கவ்வும் பெறுமே.' (உ-ம்.)
ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது, ஈமக்குடம், கம்மக்குடம். (சூ.)
'வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரி னியல்பும்முள.' (உ-ம்.)
குளக்கரை, குளங்கரை, குளமழகு, குளம்யாது பிறவுமன்ன. சிலசூத்திரத்துண் மிகாதறிக.
இவ்விருவகைப்புணர்ச்சி அல்வழிவேற்றுமையில் மெய்ம்முதன்மெய்யீறு, உயிர்முதலுயிரீறு
உயிர்முதன் மெய்யீறு, மெய்ம்முதலுயிரீறு, பெயர்முதற்பெயரீறு, வினைமுதல்வினையீறு,
வினைமுதற்பெயரீறு, பெயர்முதல்வினையீறு, பகாப்பதத்தோடு பகாப்பதம், பகுபதத்தோடு
பகுபதம், பகாப்பதத்தோடு பகுபதம், பகுபதத்தோடு பகாப்பதம், புணரப்படும். (உ-ம்.)
பொற்குடம், எ-து. மெய்ம்முதன் மெய்யீறாய்ப் பெயர்முதற்பெயரீறாய்ப் பகாப்பதத்தோடு
பகாப்பதமாயும்; பொன்னொடிந்தது, எ-து. மெய்ம்முதலுயிரீறாய்ப் பெயர்முதல்
வினையீறாய்ப் பகாப்பதத்தோடு பகுபதமாயும்; உண்டோது, எ-து. உயிர் முதலுயிரீறாய்
வினைமுதல்வினையீறாய்ப் பகுபதத்தோடு பகாப்பதமாயும்; உண்டவள் செவ்வாய்; எ-து.
உயிர்முதன் மெய்யீறாய் வினைமுதற் பெயரீறாய்ப் பகுபதத்தோடு பகுபதமாயும்
புணரப்பட்டன. பிறவுமன்ன இருமயக்கம்வருமாறு. (சூ.) 'க ச த ப
வொழித்தவீரேழன்கூட்ட, மெய்ம்மயக்குடனிலை ரழவொழித்தீரெட்,
டாகுமிவ்விருபான்மயக்கமொழியிடை, மேவுமுயிர்மெய் மயக்களவின்றே.' (உ-ம்.) சங்கம்,
வேற்றுநிலைமெய்ம்மயக்கம்; அற்றம், உடனிலைமெய்ம்மயக்கம். பிறவுமன்ன.
(நன்னூலிற்காண்க வென்ற பிறப்புவருமாறு.) (சூ.) "அவ்வழி ஆவியிடமையிடமிடறாகு,
மேவு மென்மை மூக்குரம்பெறும் வன்மை; அவற்றுள், முயற்சியுள் அ ஆ