எனவறு சுவைகளும் வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை,       இழுமெனல், சருச்சரை,       எனவெட்டூறுகளும்; உயிரில்லாப் பொருள்களின் குணங்களாம்.       எ-று. (3)   |                                                            |              141.  |             தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்க             னீங்க லடைத னடுங்க லிசைத்த             லீத லின்னன விருபொருட் டொழிற்குணம்.   |                                           |                           (இ-ள்.) உயிருள்ளபொருட்கு முயிரில்லாப்பொருட்குந் தொழிற்குண       மாமாறுணர்த்துதும். தோன்றல்,       மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல்,       நடுங்கல், இசைத்தல், ஈதல், இவ்வொன்பது       மிவைபோல் வனபிறவும் உயிருள பொருட்கு       முயிரிலாப் பொருட்கு முரிய தொழிற்குணங்களாம்.       இவ்வகைக் குணங்க ளலங்கார       வழியான் மாற்றவுமாமெனக் கொள்க. (உ-ம்.) பொற்றிரடுஞ்சு       மாடம், சீரறந் துயின்றுவாழ்       சிறந்தநாடதே, உயிர்தோன்றிமறைந்தது, உடறோன்றி மறைந்தது,       நெருப்புத்தோன்றி       மறைந்தது, என வரும். பிறவுமன்ன. எ-று. (4)   |                                                            |              142.  |             இருதிணை மூவிட நான்மொழி யைம்பா             லறுதொகை யெழுவழு வுருபுக ளெட்டே             தொகாநிலை யொன்பது தொகைநிலை யாறு             முப்பொழு திருசொல் லாகு பெயரே             பகுபதஞ் சுட்டு வினாவே வினையின்             மூவகை முற்று மிருவகை யெச்சமும்             வினைக்குறிப் பிடையுரி விதித்திவை முத்தமிழ்             மொழி யெனத் தெளிந்த முன்னோர்             வழியிவண் விளக்கிய வண்சொற் றொகையே.   |                                           |                           (இ-ள்.) இச்சொல்லதிகாரத்துள் விளங்கியவற்றைஇங்ஙனந் தொகை       யாகத்தந்தவாறு காண்க.       (5)     ஐந்தாமோத்து உரிச்சொல்லியன். - முற்றிற்று.            அதிகாரம் ஒன்றிற்கு, ஓத்தைந்திற்கு, இயல்பதினொன்றிற்கு, ஆக சூ.       102.                       மேற்கோள், சூ.118. ஆக மொத்தம். சூ. 220.             அதிகாரம் இரண்டிற்கு, மேற்கோளோடுகூடிய ஆக மொத்தம் சூ. 341.                             இரண்டாவது:-சொல்லதிகாரம்.-முற்றிற்று.  |              
			
				
				 | 
				 
			 		
			 |