பக்கம் எண் :
 
98தொன்னூல்விளக்கம்

மூன்றாவது:-
பொருளதிகாரம்.
PART III. - PORUL.
 

143.

மெய்ப்பொருள் பகாப்பொருள் வேத முதற்பொரு
ளப்பொரு ளகத்தணிந் தறைகுவல் பொருளே.
 
     (இ-ள்.) பொருளிலக்கணமாமாறுணர்த்துதும். எந்நூலுரைப்பினு மந்
நூற்குப்பாயிரமுரைத்தே நூலுரைக்கப்படும். என்னை, `ஆயிரமுகத்தான கன்றதாயினும்,
பாயிரமில்லாது பனுவலன்றே.ழு என்றாராகலின், இஃது சிறப்புப்பாயிரம். இந்நூலிலக்கண
முரைக்கில் நூனுதலியதுரைத்தலும், நூலுளதிகாரநுதலியதுரைத்தலும், அதிகாரத்துளோத்து
நுதலியதுரைத்தலும், ஓத்திடைச்சூத்திர நுதலியதுரைத்தலும், எனநால்வகையா னுரைத்தல்
வேண்டும். அவற்றுணூனுதலிய துரைத்தலாவது:- நூலாமாறும் நூலென்ற சொற்குப்
பொருளாமாறுமுரைத்தல். அவற்று ணூலாமாறுரைக்குங்கால் நூன்மூன்றுவகைப்படும்
அவை முதனூல், வழிநூல், சார்புநூலென்றாம். என்னை, `முதல்வழி சார்பெனநூன்
மூன்றாகும்.ழு என்றாராகலின், அவற்றுண்முதனூலாவது:- வரம்பிலறிவன் பயந்ததாகும்.
என்னை, "வினையினீங்கி விளங்கிய வறிவின், முனைவன் கண்டது முதனூலாகும்."
என்றார் தொல்காப்பியனார். வழிநூலாவது:- முதனூறப்பா மரபு பின்னரும் வேண்டும்
விகற்பங்காட்டி வழுவாமற்கூறுவது. என்னை, "முன்னோர் நூலின் முடி பொருங்
கொத்துப், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி, யழியா மரபினது வழிநூலாகும்."
என்றாராகலின்; சார்புநூலாவது:- அவ்விருவர்நூலின்முடிந்தபொருளை யொருசார்நோக்கி
யொருங் கொப்புப்படவைப்பது. என்னை, `இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித்,
திரிபுவே றுடையது புடைநூ லாகும்." என்றாராகலின்;
நூலென்றசொற்குப்பொருளுரைக்குங்கால், தந்திரமென்னும் வடமொழியை நூலென்று
வழங்குவது தமிழ்வழக்கெனக்கொள்க. நூனுதலியதுரைத்தலாவது:- இந்நூலின்ன
கருதிற்றென்றுரைத்தல். அது தமிழ்நுதலிற்றென்றல். தமிழ்நூன் மூன்றுவகைப்படும்.
அவை இயனூலும், இசைநூலும், நாடகநூலுமா மெனக்கொள்க. அதிகார நுதலிய
துரைத்தலாவது:- இவ்வதிகார மின்னது கருதிற்றென்றல். இவ்வதிகார மென்னு
தலிற்றோவெனின், பொருளிலக்கண நுதலிற்று. இவ்வதிகாரத்துள் விளங்கியவோத்தென்ன
பெயர்த்தோவெனின், பதிகமென்னும்பெயர்த்து. இத் தலைச்சூத்திர மென்னுதலிற்றோ
வெனின், கடவுள்வணக்கமு மதிகா ரமுநுதலிற்று. இதனுரையாவது:- "பொழிப்பெனப்
படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக் கொண்டுரைப்பதுவே." என்றாராகலின்
வறுமாறு.