பக்கம் எண் :

கற்பியல் சூ.6101
 

இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது.
  

“புள்ளிமிழகல்வயின்” என்ற மருதக்கலியுள், (79)  

“பூங்கட் புதல்வனைப் பொய்பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயின் சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து”
1

  

என்று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க.
  

நச்
  

இது, முறையானே தலைவி கூற்று நிகழும் இடங்கூறுகின்றது.
  

இதன் பொருள்: அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்  ஏற்றற்  கண்ணும் நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையில் திரியா அன்பின் கண்ணும். அவன் அறிவு ஆற்ற
அறியும் ஆகலின்-வேதத்தையுந்   தரும  நூலையுந்  தலைவன்  அறிந்த  அறிவைத்  தலைவி  மிக
அறியுமாதலின், ஏற்றற் கண்ணும்-அந்தணர்  முதலிய மூவருந்தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம்
மனைவியர்  பலருள்ளுந்  தமக்கு  ஒத்தாளை  வேள்விக்கண்  உரிமை  வகையான் ஏனை மகளிரின்
உயர்த்தல்  செய்யுமிடத்தும்,  நிறுத்தற் கண்ணும்-தத்தங்குலத்திற்கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்,
உரிமை கொடுத்த கிழவோன்பாங்கில்-அவர்  குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து,
பெருமையில் திரியா  அன்பின்  கண்ணும்-தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காத அன்பு
செய்து ஒழுகுதற் கண்ணும், அறியுமாகலின் அன்பு செய்து ஒழுகுமெனக் கூட்டுக
*.
  

என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகிய வழித்
தங்குலத்திற்  கொண்டவரே  வேள்விக்கு  உரியர்  ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம்
அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்ற வகையின் உரிமை கொடுப்ப ரென்பதூஉம் அவர்களும் இது கருமமே
செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு.
  

உதாரணம்
  

“நின்ற சொல்லி னீடுதோறினிய
ரென்று மென்றோள் பிரிபறியலரே


1. பொருள் : பக்கம் 84ல் காண்க.
  

* இவ்வுரை ஆரியச் சார்பாக வலிந்து எழுதியவுரை.