பக்கம் எண் :

130தொல்காப்பியம் - உரைவளம்
 

கல்லினும் வலியர் மன்ற
பல்லித ழுண்கணழப் பிரிந்தோரே”
1
  

(ஐங்குறு-334)
  

இது வன்புறை எதிரழிந்து கூறியது.
  

“அம்மவாழிதோழி யாவதும்
வல்லா கொல்லோ தாமேயவண
கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோ
டியாஅந்துணை புணர்ந்துறைதும்
யாங்குப் பிரிந்துறைதி யென்னுமாறே”
2
  

(ஐங்குறு-333)
  

இது புள்ளை நொந்து கூறியது.
  

“காதலருழையராகப் பெரிதுவந்து
சாறுகொளூரிற் புகல்வேன் மன்ற
வத்த நண்ணிய வங்குடிச்சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலிப் புல்லென்
றலப்பென் றோழியவரகன்ற ஞான்றே”
3
  

(குறுந்-41)
  

இஃது ஆற்றுவலெனக் கூறியது.
  

“நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
வொன்றுதெளிய நசையின மொழிமோ
வெண்கோட்டியானை சோணைபடியும்
  


1. பொருள் : தோழீ!  கேட்பாயாக.  சிறிய  இலைகளையுடைய  நெல்லி  மரங்கள் மிக்குள்ள 
மலையுருகக் காயும்  காட்டிடையே  என்  பேதை  நெஞ்சம்  பின்தொடரச் சென்றவர், என்
பலவான இதழ் போலும் மையுண்ட கண்கள் அழப் பிரிந்தார் ஆகலின் கல்லைக்  காட்டினும
வலிய நெஞ்சினர் ஆவார்.
  

2. பொருள் : தோழீ!   கேட்பாயாக.   தலைவர்   பிரிந்து   சென்ற   நாட்டுப்  பறவைகள் 
அவரைப்பார்த்து, “யாங்கள்  துணையினைப் பிரியாது உடனுறைதலை யுணர்ந்து  வாழ்வேம்;
நீ  எப்படி நின்துணையைப் பிரிந்து உறைகிறாய்” என்று கூறாதனவாயின. அதனால் அவை 
ஒரு சிறிதும் வன்மையுடையனவல்லவோ?
  

3. பொருள் : தோழீ!   காதலர்  அருகிருக்கும்  போது  திருவிழாக்  கொள்ளும்  ஊர்போல 
மகிழ்ந்திருப்பேன் உறுதியாக. அவர் பிரிந்தபோதோ பாலை நிலவழியில் உள்ள சிற்றூர்களில்
மக்கள்  விட்டு  நீங்கிய  அணில்கள்  மட்டும் விளையாடக்கூடிய முற்றத்தையுடைய வீடுகள் 
போலப் புல்லென்று வருந்தியிருப்பேன்.