பக்கம் எண் :

கற்பியல் சூ.9147
 

வணங்கிய     மொழியான் வணங்கற்  கண்ணும்  என்பது தாழ்ந்த இயல்பினையுடைய மொழியினான்1
வணங்குதற்  கண்ணும் என்பது-தாழ்ந்த இயல்பினையுடைய  மொழியினான் வணங்குதற்  கண்ணுங் கூற்று
நிகழும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“ஒண்துறைப் பொய்கை வராஅல் இனம்இரியுந்
தண்துறையூர தகுவதோ-ஒண்தொடியைப்
பாராய் மனைதுறந் தச்சேரிச் செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல்!”
2
  

(ஐந்திணையெழு-52)
  

எனவரும்.
  

புறம்படு   விளையாட்டுப்3   புல்லிய  புகர்ச்சியும்  என்பது-புறப்பட்ட  விளையாட்டினைத்  தலைவன்
பொருந்திய புகர்ச்சிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. புகர்ச்சி
4- குற்றம்.
  

உதாரணம்:
  

“காலைஎழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் மரீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென


போது  யான் நினக்கு மருந்தாய் இருந்தேன். ஆனால் இக் கற்புக் காலத்தில் நின் பிரிவால் வருந்தும்
இவளுக்கு  யான்  மருந்தாக  இருக்க  வல்லேன்  அல்லேன். அதனால் என் நெஞ்சம் நோம். நீயே
ஆற்றிப் பிரிக.
  

1. தாழ்ந்த இயல்பினையுடைய மொழி-பணிந்த மொழி.
 

2. பொருள் : தெள்ளிய  துறையிடத்துப்   பொய்கையில் வரால் மீனினம் உகளும் தண்துறை யூர! ஒண்
தொடியைப் பாராமல் மனையைவிட்டு நீங்கி அச்சேரிப் பரத்தையரிடம் செல்வதை ஊராண்மை (உதவி
செய்யும் ஆண்மை)யாகக் கொள்வது நினக்குத்   தக்கதோ?  கூறுக (இப்படித் தோழி கூறியது அவன்
வணங்கியபோது ஏற்றுக்கொண்ட நிலையில் என்க).

3. புறம்படு விளையாட்டு-புறத்தே போந்து பரத்தையரொடு ஆடிய விளையாட்டு.

4. புகர்-குற்றம், புகர்ச்சி-குற்றப்படுதல்.