பக்கம் எண் :

கற்பியல் சூ.9155
 

இறைநில்லா வளையோட இதழ்சோர்பு பனிமல்கப்
பொறைநில்லா நோயொடு புல்லென்று நுதலிவள்
விறல்நலம் விளர்ப்பவும் வினைவேட்டாய் கேளினி”
  

“உடையிவள் உயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல
இடை கொண்டியாம் இரப்பவும் எமகொள்ளா
                               யாயினை
கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
அடையொடுவாடிய அணிமலர் தகைப்பன”.
  

“வல்லைநீ துறப்பாயேல் வகைவாடும் இவளென
ஒல்கியாம் உரைப்பவும் உணர்ந்தீயா யாயினை
செல்லு நீராற்றிடைச் சேர்ந்தெழுந்த மரம்வாடப்
புல்லு விட்டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன”
  

“பிணிபுநீவிடல் சூழிற் பிறழ்தரும் இவளெனப்
பணிபுவந் திரப்பவும் பல சூழ்வாயாயினை
துணிபு நீ செலக்கண்ட ஆற்றிடை அம்மரத்து
அணிசெல வாடிய அந்தளிர் தகைப்பன;
  

எனவாங்கு,
  

“யாநிற் கூறவும் எமகொள்ளாய் ஆயினை
ஆனாதிவள்போல் அருள்வந்தவை காட்டி
மேல்நின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங்
கானந் தகைப்ப செலவு”
*
  

(கலித்-3)
  

எனவரும்.  


* கருத்து  :  தலைவ!  அறனில்லாமல்  அயல்மகளிர்  தூற்றும்    அம்பலுக்கு  நாணியும்,  நீ பிரிந்து
செல்லும் நீண்ட வழியின் கொடுமை நினைந்தும் வளையல் கழல, கண்ணீர் மல்க, தாங்கரிய நோயொடு
பொலிவற்ற நுதலுடைய இவள் தன் அழகு கெடவும் வினை விரும்பியவனே இப்பொழுது கேள்.
  

நின்னையுயிராகவுடைய    இவள் நீ விட்டுப் பிரியின் உயிர்வாழாள் எனக் கூறியாம்  பிரிவைத் தவிர்
என இரப்பவும் எம் சொற்களைக் கொள்ளவில்லை. ஆனால் நீ கடந்து செல்லும்  வழியில்  உள்ள நீர்
அற்ற வறிய சுனையில் இலையொடு வாடிய அழகிய மலர்களே தடுப்பனவாகும்.
  

விரைவில் நீ இவளைப்  பிரிவாயானால் இவள் அழகு வாடும் என்று நினக்கு ஏற்கும்  வகையில் யாம்
இரப்ப