அந்தரத்து எழுதிய எழுத்தின் மானவந்த குற்றம் வழிகெட ஒழுகலும்: வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மானவழிகெட ஒழுகுதலும்-களவுக் காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய எழுத்துவழி கெடுமாறு போல வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து ஒழுகுதற் கண்ணும். |
அது முன்பு போலக் குற்றஞ்சான்ற பொருளை வழுவமைத்துக் கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம். |
“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தால்” |
(கலி-15. 14-15) |
என்ற வழி ‘மையற்ற படிவம்’ எனத் தலைவன் கூறியதனைத் தோழி கூறியவாறு காண்க. |
அழியல் அஞ்சல் என்று ஆயிருபொருளினும்-வந்த குற்றம் நினக்கு உளதென்று அழியலெனவும் எனக்குளதென்று அஞ்சலெனவுஞ் சொல்லப்படும் அவ்விரு பொருண்மைக் கண்ணும். |
இவை இரண்டாகக் கொள்ளின்1 முப்பத்து நான்காமாதலின் இருவர் குற்றமுங் குற்றமென ஒன்றாக்கியது. தெய்வத்தினாதலின் ஏதம் பயவாதென்றான். |
“யாயுஞாயும் யாராகியரோ வெந்தையு நுந்தையுமெம்முறைக்கேளிர் யானு நீயு மெவ்வழியறிதுஞ் செம்புலப் பெய்ந்நீர் போல வன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே2 |
(குறுந்-40) |
இது நம்மானன்றி நெஞ்சந் தம்மில் தாங்கலத்தலின் தெய்வத்தான் ஆயிற்றெனத் தெருட்டியது. |
தான் அவட் பிழைத்த பருவத்தானும் -அங்ஙனந்தெய்வத்தினான் ஆயிற்றேனுங் குற்றமேயன்றோ என உட்கொண்ட அவட்கு யான் காதன் மிகுதியாற் புணர்ச்சி வேண்ட |
1. இரண்டு-நினக்குளதென்று அழியல் என்பதும் எனக்குளதென்று அஞ்சல் என்பதும். இப்படி இரண்டாகக் கொள்ளின் சூத்திரத்தில் முப்பதின் ஒரு மூன்று என்றதற்கு மாறுபட்டு முப்பத்து நான்காகும். |
2. பொருள்: பக்கம் 24ல் காண்க. |