பக்கம் எண் :

60தொல்காப்பியம் - உரைவளம்
 

‘கைபுனைவல்வில்’  நாண்   ஊர்ந்தவழி   இவள்  ‘மையில்  வாண்  முகம் பசப்பூர்’தலும் அவன் ‘புனை
மாண் மரீஇய அம்பு’ தெரிந்தவழி இவள் இனைநோக்குண்கண்ணீர்நில்லா’ மையும் பிறவுமாம்.
  

“பாஅலஞ்செவி” என்னும் பாலைக்கலி (5)யுள்
  

“ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு
ணீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ?
1

  

“அந்நாள் கொண்டிறக்குமிவளரும் பெறலுயிரே”2
  

என,     உடன்  கொண்டு  சென்மினெனத் தோழி கூறியது,  கேட்ட  தலைவன் இவளை உடன்கொண்டு
போதல்  எல்லாவற்றானும் முறையன்றென்று  தோழிக்குக் கூறுவனவும்  நெஞ்சிற்குக் கூறுவனவும் பிறவுங்
கொள்க.
  

“வேட்டச் செந்நாய் கிளைத் தூண்மிச்சில்
குளவிமொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொடுணீஇய
வருக தில்லம்ம தானே
யளியளோவளிய ளென்னெஞ்சமர்ந்தோளே”
3

(குறுந் -56)
  

இது, தோழி கேட்பக் கூறியது.
  

“நாணகையுடைய நெஞ்சே கடுந்திறல்
வேனினீடிய வானுயர் வழிநாள்
வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு


1. பொருள் : தாமரைப்  பொய்கையுள் நீர்வற்றிய காலத்து மலர் வாடுதல்போல நீ இவளைப் பிரியின்
ஓர் நாள் இரவிலாயினும் வாழ்வாளோ?
  

2. பொருள் : நீ பிரிந்த நாள் கொண்டு இவள் பெறலரிய உயிர் போய்விடும்.
  

3. பொருள் : என் நெஞ்சத்து அமர்ந்தாளாகிய  தலைவி, வாழவிரும்பும் செந்நாய்கள் தோண்டியுண்ண
எஞ்சியுள்ள காட்டு மல்லிகையிலைகள்  விழுந்ததனால் அழுகிய சிறிது நீரை என்னோடு உண்ணுமாறு
என்னுடன்  உடன்போக  வருவாளாக. அதுவே  என் விருப்பம்.  அவ்வாறுவரின்  அவள்  இரங்கத்
தக்கவளேயாவாள்.