பக்கம் எண் :

8தொல்காப்பியம் - உரைவளம்
 

பி.இ.நூ.
  

நம்பி அகப் பொருள் 57
  

களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மை யான

  

இலக்கண விளக்கம் 425
  

நம்பியகப்பொருட் சூத்திரமே.
  

மா. அக.
  

கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றியும்
கரணம் உண்டெனக் கழறினர் புலவர்.

  

இளம்
  

இது மேலதற்கோர் புறனடை.
  

(இ-ள்) கொடுப்போரின்றியும் கரண நிகழ்ச்சி உண்டு, புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு.
  

எனவே   கற்பிற்குக்  கரண  நிகழ்ச்சி   ஒருதலையாயிற்று.  இதனானே  கொடுப்போரில்வழியும்  கரண
நிகழ்ச்சி உண்மையும் ஒழுக்கக் குறைபாடுஇன்மையும்
1 கொள்க.
  

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழியாய் கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”
2

(குறுந்-15)

1. உடன்போக்கும்  உடன்  போய  பின்னர் சென்றவிடத்துத் தாமே கரண நிகழ்ச்சி கொண்டு மணப்பதும்
ஆகியவை ஒழுக்கக் குறைபாடுடையன அல்ல என்பது கருத்து.

2. பொருள்:  தோழீ!  ஆலமரத்துக்கீழ்ப்   பொதுமன்றத்தில்  வந்து  தங்கிய   நாலூர்க்கோசர்   சொல்
தவறாதவர்கள்.  அவர்கள்  சொல்  என்றும்  நல்லதாக  அமையும்.  அந்நாலூர்க்  கோசர்  நன்மொழி
உண்மையாவது  போல  வெள்வேல்  விடலையொடு  நம்  மடந்தை  பறையொலிக்கச்  சங்கு முழங்கக்
கொண்ட நட்பு உண்மையாகியது.