இனியெல்லா யாம், தீதிலேமென்று தெறிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண்மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு மாபோற் படர்தகநாம்” |
(கலி-81) |
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்-அங்ஙனம் விளையாடுகின்ற காலத்து மக்கள் தந்தையரை ஒப்பரென்னும் வேதவிதி பற்றி முடிவில்லாத சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற் கண்ணும். |
மகனுக்கும் இதுபடுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் பழித்தென்னாது ‘மகப்பழித்து’ என்றார். |
‘மைபடு சென்னி’ என்னும் மருதக்கலி (86)யுள் |
“வனப்பெலா நுந்தையை யொப்பினு நுந்தை நிலைப்பாலு ளொத்த குறியென்வாய்க் கேட்டொத்தி கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றி மாட்டொத்தி பெரும மற்றொவ்வாதி யொன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோன் மென்றோ ணெகிழவிடல்” |
என அவனைக் கொண்டு விளையாடியவழி அவன் தலைவன் மேல் வீழ்தலின், |
“தந்தை வியன்மார்பிற் பாய்ந்தானறனில்லா வன்பிலி பெற்ற மகன்” |
எனத் தன் திறத்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு காண்க. |
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்-கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ-கொடியோரென்றது பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலியோரை, கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறுதற்கு விரும்பினோர் பரத்தையர்க்கு வாயிலாய் வந்து கூறிய சொல்லோடே தானும் அவரிடத்தே சேர்ந்து பகுதியின் நீங்கிய கொடுமை-காவற் பாங்கிற் பக்கமும் ஆங்கோர் பக்கமுமாகிய பகுதி காத்தலினின்று நீங்கிய பரத்தை |