பக்கம் எண் :

கற்பியல் சூ.6117
 

நல்வாயிற் போத்தந்த பொழுதினானெல்லா
கடவுட் கடிநகர் தோறுமிவனை
வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை
யீரமிலாத விவன்றந்தை பெண்டிருள்
யாரிற் றவிர்ந்தனை கூறு.
நீருள் அடைமரை யாயிதழ்ப்போது போற் கொண்ட
குடைநிழற்றோன்று நின்செம்மலைக் காணூஉ
விவன்மன்ற யானோவ வுள்ளங் கொண்டுள்ளா
மகனல்லான் பெற்ற மகனென் றகனகர்
வாயில் வரையிறந்து போத்தந்து தாயர்
தெருவிற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர்
தத்தங் கலங்களுட் கையுறை யென்றிவற்
கொத்தவை யாராய்ந் தணிந்தார் பிறன்பெண்டி
ரீத்தவை கொள்வானுமிஃதொத்தன் சீத்தை
செறுத்தக்கான் மன்ற பெரிது.
சிறுபட்டி ஏதிலார் கையெம்மையெள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோயாங் காண்கு”

  

“அவற்றுள் நறாவிதழ் கண்டன்ன செவ்விரற்கேற்பச்
சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள்
குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ்
செறியாப் பரத்தை யிவன்றந்தை மார்பிற்
பொறியொற்றிக் கொண்டாள்வலென்பது தன்னை
யறீஇய செய்தவினை
அன்னையோ விஃதொன்று
முந்தைய கண்டு மெழுகல்லா தென்முன்னர்
வெந்தபுண் வேலெறிந்தற்றாலிஃதொன்று
தந்தை யிறைத்தொடீஇ மற்றிவன் றன்கைக்கட்
டந்தாரியாரெல்லா அவிது
இஃதொன்று
என்னொத்துக்காண்க பிறருமிவற் கென்னுந்
தன்னலம் பாடுவி தந்தாளாநின்னை
யிது தொடு கென்றவர் யார்
அஞ்சாதி நீயுந் தவறிலை நின்கையிதுதந்த
பூவெழி லுண்கணவளுந் தவறிலள்
வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்
மேனின்று மெள்ளியிதுவிவன் கைத்தந்தா
டான்யாரோ வென்றுவினவிய நோய்ப்பாலேன்
  
யானே தவறுடையேன்”
  

(கலி-84)