பக்கம் எண் :

கற்பியல் சூ.6131
 

பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர்வரவே”
1
  

(குறுந்-75)
  

இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது.
  

“இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலு
மும்மையா மென்பவரோரார் கா ணம்மை
யெளியரென நினைத்த வின்குழலாரேடி
தெளியச் சுடப்பட்டவாறு”
  

(திணை-நூற்-123)
  

இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது.
  

“பெருங்கடற்றிரையது சிறுவெண் காக்கை
நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனொ
டியாத்தேம் யாத்தன்று நட்பே
யவிழ்த்தற் கரித்து முடிந்தமைந் தன்றே”
2
  

(குறுந்-313)
  

இது, தலைவன் தவறிலனென்று கூறியது.
  

“உடலினே னல்லேன் பொய்யாதுரைமோ
யாரவண் மகிழ்ந தானேதேரொடு
தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின்
வளமனை வருதலும் வௌவியோளே”
3
  

(ஐங்குறு-66)  


1. பொருள் : பாண! தலைவர் வருகையை நீ பார்த்தாயா? கண்டார் சொல்லக் கேட்டாயா? 
உண்மையறிய விரும்புகின்றேம்.  சொல்.  நீ சொல்லின் யானைபடியும் சோணையாறுள்ள
பாடலி என்னும் நகரத்தைப் பெறுவாய்.யார் வாய்க் கேட்டாய்?
  

2. பொருள் : கடற்கரைச்  சிறு  வெண்  காக்கையானது  நீந்தும்படியாக  மிக்க நீருடைய 
கழியிடங்களில் இரையை ஆராய்ந்து உண்டு சோலையில் தங்கும்படியான துறைவனோடு 
யான்  என்னை  நன்றாகப்  பிணைத்துக்  கொண்டேன்.  அப்படி பிணைத்த நட்பானது 
நன்றாகப் பிணைக்கப்பட்டதேயாம். யாராலும் அவிழ்த்தற்கரிது. உறுதிப்பட்டதாகும் அது.
  

3. பொருள் : மகிழ்ந!   தேருடன்   தளர்நடையிட்டுவரும்   புதல்வனை  நினைத்து  நீ 
வளமனைக்கு  வரவும் நின்னைத்  தடுத்துத்  தன்பால்  வௌவியவள் யார்? உன்னைச்
சினந்து வினவவில்லை. பொய் கூறாது மெய் கூறுக.