பக்கம் எண் :

150தொல்காப்பியம் - உரைவளம்
 

சூள்வயிற்  றிறத்தாற்  சோர்வுகண்டழியினும்  என்பது-தலைமகன்  சூளுற்ற  சூளுறவிற் சோர்வு1 கண்டு
அழிந்து கூறினும் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்
  

“எம்மணங்கினவே மகிழ்ந முன்றில்
நனைமுது புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரொடுற்ற சூளே”
2

(குறுந்-53)
 

என வரும்.
  

பெரியோரொழுக்கம்     பெரிதெனக்   கிளந்து   பெறுதகையில்லாப்   பிழைப்பினும்   என்பது   -
பெரியாரொழுக்கம்  பெரிதாகுமெனச்  சொல்லித்  தலைமகளைப்  பெறுந்தகைமையில்லாத  பிழைப்பின்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு
*.
  

உதாரணம்
  

“வெள்ளி விழுத்தொடிமென் கரும்புலக்கை
வள்ளி நுண்ணிடை வயின் வயின் நுடங்க


நெய்தற்   பூக்கள்  கழியிடத்து அலைகள் வந்து மிகுந்தோறும் மூழ்கி வெளிப்படுதல் மகளிர் குளத்தில்
மூழ்கும்போது  அவர் கண்கள்  மறைந்து   வெளிப்படுவது  போலத் தோன்றும்படியான நீர்த்துறைவன்
தனக்குச்  செய்த கொடுமையை  நமக்கு  வெட்கப்பட்டு    மறைத்துப்  பேசா நிற்பள். (இப்படிக் கூறித்
தலைவனை அவள் பால் செல்க என்றாள்)

1. சோர்வு-கடைப்பிடியாது விடுதல்.

2. பொருள் :  மகிழ்ந!   அரும்பு   முதிர்ந்த   புன்கமரத்தின்  பூக்கள் உதிர்ந்து கிடக்கும் வெண்மணற்
பரப்பானது வேலன் வெறியாடு களத்தில் நெற்பொரிகள் சிதறினாற்  போக இருக்கக்கூடிய இடு மணல்
உடைய எம் ஊரின் பெரிய நீர்த்துறையிடத்து  எம்  நேரிய சந்துடைய  முன்கையைப்  பற்றிச் சூரர
மகளிரைக் காட்டிச் செய்யசூளுறவானது நீர் அதன்படி நடவாமையின் எம்மை வருத்தியது.

* தலைமகளைப்  பெறும்  தகைமையில்லாத  பரத்தமைச்  செயலாகிய  பிழைப்பில் பெரியோர் நடத்தை
பெரிது எனச் சொல்லுமிடத்தும் எனக் கருத்துக் கொள்க.