கவரும் துறைவனை நம் கண்ணாற் காண இயையுமோ? காண இயையின் அவனை வளைத்து நீ கவர்ந்து சென்ற எம் அழகைத் தருக என்பேம். 1. பொருள் : கடல்போற் குவிந்த மணல் அடைகரையில் ஓங்கிய புன்னையின் தாழ்ந்த கிளையில் புதிய நாரை வந்து தங்கும்படியான கடற்கரைச் சேர்ப்பனே! இவளைக் கைவிட்டாய் எனச் சொல்லுமாறு நீ நீங்கும் நாள் வரினும் வருக. அந்நாள் வருகையை நீ விரும்பினாயாயின் முன்உண்ட என் நலனை எனக்குத் தந்து செல்வாயாக. 2. பேணா ஒழுக்கம்-தலைவனின் பரத்தமையொழுக்கம். 3. பொருள் : தலைவ! மாயோள் செப்பில் தனித்து வைக்கப்பட்ட அணியப்படாத பூவைப்போல வாடினாள். |