வும் எம் சொற்களைக் கொள்ளவில்லை. ஆனால் நீ’ செல்லும்வழியில் உள்ள மரங்கள் வாட அவற்றைத் தழுவிப் படரும் பூங்கொடிகள் தடுப்பனவாகும். இவளைச் சேர்ந்திருந்தலை விடுவதை நீ நினைவாயாயின் இவள் இறந்துபடும் என யாம் பணிந்து இரப்பவும் பிரியவே பலவும் சூழ்வாய். ஆனால் நீ செல்லும் வழியில் மரத்தில் உள்ள வாடிய தளிர்கள் தடுப்பனவாகும். என்று யான் நினக்குச் சொல்லவும் அவற்றை நெஞ்சிற்கொள்ளாய் ஆயினாய். இனி இவளைப் பார்ப்பார்க்கு இரக்கம் வருவது போலவே கண்டார் இரங்கத்தக்கனவாகிய மரம் கொடி தளிர் முதலியனவற்றைக் காட்டி உண்மை கூறும் கேளிரைப் போல நீ செல்லும் செலவைத் தடுப்பன நீ செல்லும் காடுகளாம். 1. பொருள் : பிரிதற்கரிய பிரிவைத் தாங்கி, அதனால் வரும் துன்பத்தையும் நீக்கிப் பொறுத்திருந்து இவ்வளவு நிகழ்ந்த பின்னும் உயிரோடு வாழ்வார் உலகில் பலர். 2. பொருள் : காட்டுப் பசுவானது சிலைக்கும் அழகிய மலையின் அரிய வழியில் அம்பு விளங்கும் வில்லுடைய. |