1. பொருள்: வரால் மீனானது, தூண்டிலின் இரும்பில் உள்ள இரையை விழுங்கி அதில் அகப்பட்டு ஆம்பல் இலை கிழியவும் குவளை மலர்சிதையவும் பாய்ந்தெழுந்து வள்ளைக் கொடியை மயக்கி தூண்டில் வேட்டுவன் இழுக்கவும் வாராமல் கயிறு பூட்டியிழுக்கப்படும் கதமிக்க எருதுபோல மதம்மிக்கு நாட்காலையில் குளத்தைக் கலக்கும்படியான ஊரனே! வையைத் துறையில் மலர்க்காவில் குறுந்தொடி மடந்தையாகிய பரத்தையொடு மணம் அயர்த்தனையென்பர். அவ்வலரானது தலையானங்கானம் என்னும் ஊரில் செழியனானவன், சேரலன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும் எழுவர் பலம் அடங்கக் கொன்று வெற்றி கொண்டகாலத்து வீரர் ஆர்த்த ஆர்ப்பரிப்பினும் பெரிதாகியது. |