நின்பாணனொடு முரசு முழங்கச் சுற்றத்துடன் கள்ளுண்டு எம் மனைக்கு வாராமல் நின் பரத்தைமனைக்குச் சென்று தங்கியபோது, குறுந்தொடி மடந்தையாகிய பரத்தை கொண்ட உவகையானது, கிள்ளிவளவனானவன் கூடலில் பழையன் மாறனைப் போரிற் சாய்த்துக் கொண்ட வெற்றியைக் கண்டு கோதை மார்பன் என்னும் சேரவேந்தன் கொண்ட உவகையினும் பெரிதாகும். யாங்கள் அதைப் பொருட்படுத்தியதும் இல்லை. அப்படியிருக்க நீ யாரையும் யான் அறியேன் என்றது மிக்க நகையை உண்டாக்குவதாகும். 1. பொருள்: மகிழ்ந! கேட்பாயாக. நின் மயங்கிய நெஞ்சத்தின் வருத்தம் தீர ஆற்றுமாறு நினக்கு மருந்தாய் இருந்த யான் இனி இவளை ஆற்றும் மருந்தாய் இல்லாமைக்கு என் நெஞ்சம் வருந்தும். 2. பொருள்: பக்கம் 146ல் காண்க. |