ஆடும் மகளிர் சூடிக்கழித்த பல பூக்களை மருவிப் பசுக்கள் தம் இடம் புகும்படியான மாலைக் காலத்தில் மரந்தையூர் போலும் எம்மை நீ விரும்பி வந்தாயல்லை; அதனால் எம் நலனைத் தந்து செல்லும். 1. பொருள்: பக்கம் 148 - 149ல் காண்க. 2.பொருள் : பெரும! நாட்காலையில் நீர்நாய்ப் போத்து வாளையாகிய இரையைத் தேடும் ஊரனே! பகலில் மறைவாக மெல்ல வந்து முகமனுரை கூறி, மடவோய்! யானும் ஊன்சேரியில் உள்ளேன்; அடுத்த வீட்டுக்குரிமையுடையேன்; நினக்குத் தங்கையாவேன். என்று |