பொழுதில் தலைவியது மெல்லென்ற சீறடியைப் புல்லிய இரத்தற் கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |
உதாரணம் |
“ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவதன்று கொல் என்று”1 |
(குறள்-1307) |
“ஊடுக மன்னோ ஒளியிழை யாம் இரப்ப நீடுக மன்னோஇரா”2 |
(குறள்-1329) |
“ஊடலில் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடுபெறும்”3 |
(குறள்-1322) |
எனவரும், |
உறலருங்குரைமையி4னூடன் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் என்பது-ஊடல் மிகுத்தோர் உறுதற் கருமையாற் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்தற் கண்ணும் என்றவாறு. |
“புனவளர் பூங்கொடி யன்னாய்” என்னும் மருதக்கலியுள், |
“ஒருத்தி, புலவியாற் புல்லாதிருந்தாள் அலவுற்று வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன் தண்தார் அகலம் புகும்”5 |
(கலி-12) |
1-3. பொருள் : புணர்ச்சி நீடிக்குமோ நீட்டியாதோ எனக் கருதலால் புணர்ச்சிக்கு இன்பம் தரும் ஊடலிலும் ஓர் துன்பம் உண்டு. |
ஒளியிழை ஊடல் கொள்க; அவள் ஊடலைத் தீர்க்கும்வரை இரவும் நீடிப்பதாக. |
ஊடல் காரணமாகத் தோன்றும் சிறிய துன்பம் அவளின் தலையளிவாடினும் பின்னர்ச் சிறப்புப் பெறும். |
4. உறல் அருங்குரைமையின்-உறல் அருமையின்-இதில் குரை என்பது அசைநிலையிடைச் சொல். |
5. பொருள் : ஒருத்தி தலைவன்பாற் கொண்ட புலவியால் அவனைப் புல்லாதிருந்தாள். வண்டினம் ஆர்ப்பரித்து மொய்க்கையால் வருத்தமுற்று இடையே புலவியைக் கைவிட்டு அவள் தன்னை வணங்குதலால் அவன் தண்தார் மார்பில் முயங்கும். |