பக்கம் எண் :

34தொல்காப்பியம் - உரைவளம்
 

மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதுநாம் எனினே”
1 

(அகம்-5)
 

எனவரும்.
  

தானவட்  பிழைத்த  நிலையின்  கண்ணும்  என்பது-தலைவன்  தலைவியை  நின்னிற் பிரியேன் என்ற
சொல்லிற் பிழைத்த நிலையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

பிழைத்தலாவது பிரிதல் :
  

“வயங்குமணி பொருதவகையமை வனப்பிற்
பசுங்காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பெய்திய புனைபூஞ் சேக்கை
விண்பொரு நெடுநகர்த் தங்கிஇன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே காளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்புவந்துறுதரச்
சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்து
அதர்கூட்டுண்ணும் அணங் குடைப்பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகைவெரீஇ
ஊரெழுந் துலறிய பீரெழு முதுபாழ்
முருங்கை மேய்ந்த பெருங்கையானை


1. பொருள் : நெஞ்சமே! ஒண்ணுதலானவள், யான் அழகு செய்தலைப் பொறாது மாறுபட்ட முகத்தளாய்,
அழைக்கவும் கேளாளாய் குணம் நீங்கத் தனித்து மெல்ல மெல்ல நிலம் வடுக்கொள நடந்துவந்து, கூரிய
பற்கள்  தோன்றப் பொய்யான  முறுவலுடன் அவள் எண்ணியதையான் அறியுமுன்  யான் வினைமேற்
பிரிதலுக்கு  இசையாத  நினைவோடு,  ஐயனே! கானவழியில் எம்மைப்  பிரிந்து கடக்க நினைப்பீராயின்
காதலரைப் பிரிதல் அறமன்று என்று கூறிய பழமொழி பொருளற்று அப்படியே கழிக, என்று  குறிப்பால்
முகத்தால்  உரைத்துக்  கண்ணீர் நிறைந்த நோக்கமொடு  தன் புதல்வன் தலையில்  சுற்றிய மாலையை
மோந்து  உயிர்த்தபோது  யான்  அவளது  அணியிழந்த தோற்றம்  கண்டு செலவு ஒழிந்தேன். யான்
பக்கத்திருக்கவும் இப்படி வருந்துபவள் பிரிந்தால் உயிர்வாழாள் அல்லளோ?