பக்கம் எண் :

கற்பியல் சூ.15
 

பின்னர்   அது  கைவிட்டு   இல்லறமே  நிகழ்த்தித்   துறவறத்தே   செல்வனென்றுணர்க.  இக்  கற்புக்
காரணமாகவே  பின்னர்  நிகழ்ந்த  ஒழுகலாறெல்லாம்  நிகழ   வேண்டுதலின்   அவற்றையும் கற்பென்று
அடக்கினார்.  இருவரும்  எதிர்ப்பட்ட  ஞான்று  தொடங்கி  உழுவன்பால்  உரிமை   செய்து  ஒழுகலிற்
‘கிழவனும்   கிழத்தியும்’   என்றார்.   தாயொடு  பிறந்தாருந்  தன்னையருந்   தாயத்தாரும்   ஆசானும்
முதலியோர் கொடைக்குரியர் என்றற்கு ‘மரபினோர்’ என்றார்.
  

உதாரணம்
  

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற்ற மலைநிற்ப நிரைகாற்
றண் பெரும்பந்தர்த் தருமணன் ஞெமிரி
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்
கனை யிருளகன்ற கவின் பெறுகாலைக்
கோள்கானீங்கிய கொடுவெண்டிங்கட்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம்பெண்டிர்
முன்னவும் பின்னவுமுறை முறைதரத்தரப்
புதல்வற் பயந்த திதலை யவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த வீரிதழலரி
பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத்தமர்தர
வோரிற் கூடியவுடன் புணர் கங்குற்
கொடும் புறம் வளைஇக்கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர் புறந்தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
வஞ்சின ளுயிர்த்த காலை யாழநின்
னெஞ்சம் படர்ந்த தெஞ்சாதுரையென
வின்னகை யிருக்கைப்பின் யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
வகமலியுவகையளாகி முகனிகுத்